செய்திகள் :

மும்பை: உத்தவ் கட்சி கவுன்சிலர் மேயராவதை தடுத்த பாஜக... மகாராஷ்டிராவில் 15 மாநகரில் பெண் மேயர்கள்!

post image

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் எந்த மாநகராட்சிக்கு பெண் மேயர், எந்த மாநகராட்சிக்கு பொது பிரிவை சேர்ந்தவர் மேயர் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கலில் எஸ்.சி பிரிவும் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான நகர்ப்புற மேம்பாட்டுத்துறை லாட்டரி குலுக்கலில் இந்த பிரிவை சேர்க்கவில்லை.

இதற்கு காரணம் மும்பையில் சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த யாரும் எஸ்.சி பிரிவில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்படவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து இரண்டு பேர் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கலில் எஸ்.சி பிரிவை சேர்ந்தவர் வரும் பட்சத்தில் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்தவர்தான் மேயராக தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை வரும். எனவே எஸ்.சி பிரிவை மேயர் லாட்டரி குலுக்கலில் சேர்ப்பதை தவிர்த்துவிட்டனர்.

இதையடுத்து சிவசேனா(உத்தவ்) கட்சியினர் லாட்டரி குலுக்கலில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நடந்த லாட்டரி குலுக்கலில் மும்பை, புனே, நவிமும்பை உட்பட மாநிலம் முழுவதும் 15 மாநகராட்சிகளுக்கு பெண் மேயரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

மும்பை, புனே, நவிமும்பையில் பொதுப்பிரிவை சேர்ந்த பெண் மேயராக பதவியேற்க இருக்கிறார். நாக்பூரிலும் பெண் மேயர் பதவியேற்க இருக்கிறார். மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 89 இடங்களிலும், சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களிலும், மற்றொரு சிவசேனா(உத்தவ்) 65 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இதையடுத்து முதல் முறையாக பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் மும்பை மேயராக பதவியேற்க இருக்கிறார். மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளில் 25 மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்து இருக்கிறது.

காதலனை கொன்று சிறை சென்ற பெண்ணுக்கு ஆயுள் கைதியுடன் மலர்ந்த காதல்! - திருமணம் செய்ய 15 நாள் பரோல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடலாக இருந்த நேகா(34) என்ற பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவருடன் 2018ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. நேகாவிற்கு ஏற்கனவே திக்‌ஷந்த் கம்ரா என்ற காதலன் இருந்தார். ... மேலும் பார்க்க

நாமக்கல்: மலைக்கோயிலில் எளிமையாக நடந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் திருமணம்! - ராஜஸ்தானை சேர்ந்தவர்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்த் மீனா. இவர், கடந்த 2022-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். தற்போது சேலம் புறநகர் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தான் மா... மேலும் பார்க்க

உணர்வுப்பூர்வ சந்திப்பு: மும்பையில் வழித் தவறிய தாய் - 12 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்து வைத்த போலீஸ்

மும்பையில் ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்தவர்களாகவோ அல்லது உறவுகள் அற்றவர்களாகவோ இருக்கின்றனர். அவ்வாறு மும்பையில் யாசகம் பெறுபவர்களை மீட்டு போ... மேலும் பார்க்க

`3 பங்களா, 3 ஆட்டோ, கார், கந்துவட்டி' - இந்தூரில் யாசகம் எடுத்து ராஜவாழ்க்கை வாழ்ந்த மாற்றுத்திறனாளி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாசகம் எடுத்து வாழ்ப்வர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நகர் முழுவதும் யாசகம் எடுப்பவர்களை பிடித்து சென்று முகாம்களில் அடைத்தது. அங்க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவர்களை வேட்பாளர்களாக்கிய அஜித்பவார்; சிறையிலிருந்தே வென்ற பெண்கள்; பின்னணி என்ன?

புனே மாநகராட்சித் தேர்தலில் கேங்க்ஸ்டர் பாண்டு ஆண்டேகரின் உறவுக்கார மகளிர் சிறையில் இருந்து கொண்டே போட்டியிட்டனர்.பாண்டு ஆண்டேகரின் மருமகள் சோனாலி மற்றும் மைத்துனி லட்சுமி ஆகியோர் கொலை வழக்கில் சிறையி... மேலும் பார்க்க