செய்திகள் :

சென்னை: மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோல்; போதை கணவரிடம் போலீஸ் விசாரணை!

post image

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சுகன்யா (31). கார்த்திக் வீட்டில் நேற்றிரவு பயங்கர சத்தம் கேட்டது. அதனால் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் என்னவென்று விசாரித்தனர். அப்போது கழுத்தில் கத்திரிக்கோல் குத்திய நிலையில் சுகன்யாவை ரத்தம் சொட்ட, சொட்ட தூக்கிக் கொண்டு கார்த்திக் வெளியில் வந்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சுகன்யாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டு சென்றார். அங்கு சுகன்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதோடு இந்தச் சம்பவம் குறித்த எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலம்

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார் உயிரிழந்த சுகன்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் சுகன்யா எப்படி இறந்தார் என விசாரித்தனர். அப்போது கார்த்திக் மது போதையிலிருந்ததால் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தனர். அதனால் சுகன்யா எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. போதை தெளிந்த பிறகு கார்த்திக்கிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில் சுகன்யாவின் கழுத்தில் கத்திரிக்கோல் குத்திய காயத்தை பார்த்த டாக்டர்கள், சில தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனடிப்படையில் கார்த்திக்கிடம் போலீஸார், விசாரித்தபோது சம்பவத்தன்று தனக்கும் தன் மனைவி சுகன்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து சுகன்யா கழுத்தில் குத்திக் கொண்டார் என்று கார்த்திக் தெரிவித்திருக்கிறார். ஆனால், சுகன்யாவால் அவ்வளவு ஆழத்துக்கு கத்திரிக்கோலால் குத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனால் மர்ம மரணம் என்ற பிரிவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

`மனைவியிடம் சொல்வேன்'- மிரட்டிய காதலி; கொன்று உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் மோனிகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் 2021ம் ஆண்டு அறிமுகமாகிக்கொண்டனர். அடிக்கடி விசாகப்பட்டினத்தின் பல பகுத... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: கொலையில் முடிந்த வாக்குவாதம்; வியாபாரியின் தலையை வெட்டி எடுத்த நபர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகில் உள்ள பார்சவால் என்ற கிராமத்திற்கு பப்லு என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்ய சென்றார். அங்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது என்று சங்கர்(50) என்பவர் தெரிவித்தார். ஆன... மேலும் பார்க்க

தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!

மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் த... மேலும் பார்க்க

எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்' என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி... உஷார்!

ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் பற்றாக... மேலும் பார்க்க

பெங்களூரு: இஸ்லாமிய மாணவனை 'தீவிரவாதி' எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், வகுப்பு நேரத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை பேராசிரியர் ஒருவர் ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக்கருத்துக்களை உமிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ... மேலும் பார்க்க

காதலனை கரம்பிடிக்க பாலில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகள் - குடும்ப சண்டையில் காட்டிக்கொடுத்த கணவன்

காதலனை கைபிடிக்க, சொந்த தந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையின் வேலையில் சேர்ந்த மகள் 3 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் என்ற இடத்தை சே... மேலும் பார்க்க