செய்திகள் :

தஞ்சாவூர்: கலெக்டரால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் பணி செய்த விவகாரம்; மூவர் பணியிட மாற்றம்!

post image

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி உதவியாளராக சுதர்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பல முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால், இவரை மாவட்ட ஆட்சியர் ரேவதி ஜூலை 6ம் தேதி பணி நீக்கம் செய்தார். மேலும், இந்தப் பணியிடத்துக்கு தற்காலிகமாக பெண் பணியாளர் சினேகா என்பவர் நியமிக்கப்பட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட சுதர்சன்

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட சுதர்சன் ஜூலை 25ம் தேதி மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார். இதைப் பார்த்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் குலோத்துங்கன் கேள்வி எழுப்பி வீடியோவும் எடுத்தார். அப்போது, `சார், உங்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். நீங்க எப்படி இங்கு உட்கார்ந்து வேலை செய்கிறீர்கள்?' என குலோத்துங்கன் கேட்டார். உடனே சுதர்சன், `உங்களுக்கு என்ன வந்துச்சி?' எனக் கேட்க, `இது என்னோட டிபார்ட்மென்ட், என்னோட செக்‌ஷன்' என்றார் குலோத்துங்கன்.

மேலும், `உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது. கலெக்டர் டிஸ்மிஸ் செய்திருக்கிறார். பணம் வாங்கிய புகார்கள் உள்ளன' என்றதும் அங்கிருந்த பெண் அலுவலர், `புதிதாகப் பணியில் சேர்ந்தவருக்கு கற்றுக் கொடுக்கிறார்' என்றார். உடனே, `அவர் என்னைக்கு பணி நீக்கம் செய்யப்பட்டார், இப்போது வந்து பணி செய்கிறார். அரசு நிர்வாகத்தில் எப்படி இதற்கு அனுமதி கொடுத்தீர்கள்' என்றார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரையும் சக ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.

இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர் சுதர்சன், சத்துணவு பிரிவில் பணியாளர்களுக்கு ஊதியம் போடுவதற்காக கணினியில் பதிவேற்றம் செய்தார் என வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரேவதி விசாரணை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் வட்டார ஊராட்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி) சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வி.பி.ஜி ராம்ஜி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வே.சித்ரா பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், உதவியாளர் ஆர்.ரேவதி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், புதிதாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக சத்துணவு கணினி உதவியாளர் சினேகாவை பணியிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து: ``ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது" - அமைச்சர் நிர்மல் குமார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தலைமை தாங்கிய இந்த விழாவில், முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில்... மேலும் பார்க்க

நெல்லை: கண்ணீர் விட்ட மாணவிகள்; மன்னிப்பு கேட்ட ஆளுநர்; மூன்றாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

நெல்லை: கண்ணீர் விட்ட மாணவிகள்; மன்னிப்பு கேட்ட ஆளுநர்; மூன்றாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! மேலும் பார்க்க

காவிரியில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் வேண்டாமா? - மத்திய இணை அமைச்சர் கூறுவது உண்மைதானா?!

"மேல்படுகை மாநிலமான கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, கீழ்ப்படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற... மேலும் பார்க்க

PM Shri School: `ஏழு கோடி பேர் பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்' - சு.வெங்கடேசன்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 'பி.எம் ஸ்ரீ' பள்ளி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.எம் எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில்... மேலும் பார்க்க

"ஜந்தர் மந்தர் இளைஞர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்" - நெல்லையில் ஆளுநர் அர்லேகர் பேச்சு

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், "பட்டம் பெறும் அனைத்து... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில்..."- முதல்வருக்கு உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டுக்கும் - கர்நாடகாவுக்கும் மத்தியில் மேகதாது அணை விவகாரம் தீவிரமாகிவருகிறது. இது தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜல... மேலும் பார்க்க