செய்திகள் :

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்: தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா? | Live News Updates

post image

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா?

முதலமைச்சர் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா என இதுவரையிலான நிகழ்வுகளில் 'வந்தே மாதரம்' தான் முதலில் பாடப்பட்டது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் கடைசியிலும் பாடப்படுவதே வழக்கம்.

ஆனால், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு 'ஆளுநர் மாளிகையால் நடத்தப்பட்ட நிகழ்வு', 'தேசிய பாடல் முதலில் பாட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறை வந்துள்ளது' என்று எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், அது ஒத்துக்கொள்ளப்படவில்லை.

இதனால், இன்றைய சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மிக முக்கியமாக கவனிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

தவெக அரசு அமைந்ததில் இருந்து மின்வெட்டு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, குதிரைப் பேரம் குற்றச்சாட்டு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன.

இவை குறித்து கேள்வி எழுப்புவதே எதிர்க்கட்சிகளின் இன்றைய அஜென்டா.

உதயநிதி
உதயநிதி

அர்லேகருக்கு அழைப்பு

இன்று முதல் நாள் சட்டமன்றக் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் அர்லேகர் உரையுடன்தான் சபை தொடங்கும். இதனால், சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அர்லேகருக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

முதல் சட்டமன்றம்

இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. தவெக அரசு அமைந்த உடன் கூடும் முதல் சட்டமன்றத் கூட்டத்தொடர் இது.

கூடவே, இந்த அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளும் இடம்பெற்றிருப்பது முக்கியமானது.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் பிற அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ல் இணைந்திருங்கள்.

முன்னரே கையெழுத்தான ஈரான் - அமெரிக்கா MoU; ட்ரம்ப், பெசெஷ்கியான் டிஜிட்டல் கையெழுத்து!

3 மாதங்கள் 20 நாள்கள் கழித்து அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஈரான் போர் தொடங்கியதில் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் பிரச்னையில்லை... பாதிப்பில்லை. ஹார்முஸ் நீர்ச... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்க்கு செவித்திறன் கருவியை அனுப்பிய கோவை சமூக ஆர்வலர்; காரணம் என்ன?

தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும்பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் நிலையில், அவற்றுக்குஎதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முதலமைச்சரை விஜய்யைக் கண்டித்து, கோவ... மேலும் பார்க்க

`அப்செட், நோஸ்கட்... ரணகளமான பனையூர் கூட்டம் டு சீண்டிப் பார்க்கும் சி.வி சண்முகம்!' | கழுகார்

ரணகளமான பனையூர் கூட்டம்!அப்செட்... நோஸ்கட்...தேர்தலுக்கு பின் பனையூரில் நடந்த முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தொகுதிகளை வெல்ல வைத்த மா.செ-க்களுக்கு பாராட்டுக்கு பதிலாக ஷாக் கொடுத்து அனுப்பியிர... மேலும் பார்க்க

தனியார் நிறுவனத்திடம் மாசப்படி பெற்ற வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பினராயி விஜயன் மகள்!

கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் கருமணல் கம்பெனியான ​சி.எம்.ஆர்.எல் மற்றும் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் நிறுவனம் இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்த... மேலும் பார்க்க

`அனிதாவில் துவங்கிய நீட் மரணம் என் மகளோடு முடியணும்’ – தற்கொலை செய்த கோவை மாணவியின் தந்தை வேதனை!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த செந்தில் பிரபு என்பவர், கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரின் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள த... மேலும் பார்க்க