செய்திகள் :

தவெக: ``திரைமறைவு பேரமா? விஜய் அடுத்த எம்.ஜி.ஆரா? ஆட்சியில் பங்கு?" - திருமாவளவனின் 'பளீச்' பதில்கள்

post image

தவெக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விசிக கட்சிகளின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகே மூன்று கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளியிலிருந்து தெரிவிப்பதாக அறிவித்தன.

இந்த நிலையில், திரைமறைவில் விசிக பேரம் பேசியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கினோம்.

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா
திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா

இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக வதந்திகள் பரவின. நாங்கள் தி.மு.க கூட்டணியில் அங்கமாக இருந்துதான் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பல்வேறு போராட்டக் களங்களில் பயணித்திருக்கிறோம். எனவே, ஒருவேளை திமுக ஒரு முன்மொழிவை வைத்தாலும், அதை எங்களால் புறந்தள்ளிவிட முடியாது.

அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெற்றால், அது திமுக கூட்டணியை விட்டு முற்றாக வெளியேறுவதாகக் கருதப்படும். இது ஒரு கொள்கை ரீதியான முடிவு என்பதால், விவாதிப்பதற்கு எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

அதற்குள் திரைமறைவுப் பேரம் நடப்பதாக வதந்திகள் பரவின. அப்படி எதுவும் நடக்கவில்லை. கட்சித் தொண்டர்கள் இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்துத் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்.

முதல்வர் விஜய் என்னைச் சந்திக்கவிருப்பதாகத் தெரியவருகிறது. முதல்வர் உடனான சந்திப்பின்போது இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்க மாட்டோம். அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும்.

சட்டசபையில் விஜய்யை அடுத்த எம்.ஜி.ஆர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்த இடத்திற்கு விஜய் வந்திருக்கிறார் என்பதை மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் நான் பார்க்கிறேன். மக்கள் அவருக்கு அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"பழையபடி +2 மதிப்பெண்களின்படி, MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்" - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக த... மேலும் பார்க்க

துரைமுருகனின் அறையில் ஆனந்த்; கே.என்.நேரு அறையில் அருண்ராஜ்! - தலைமைச் செயலக சுவாரஸ்யங்கள்!

தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று 3 நாட்கள் ஆகிறது. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகள் ஆட்சி நடத்திய சட்டமன்றத்தில் இப்போது தவெகவின் ஆட்சி நடக்கிறது. தவெக-வினரின் வருகையால் சட்டமன்றமே ஒருவித புத... மேலும் பார்க்க

`விஜய்யின் முதன்மை செயலாளரான ஆஸ்தான ஜோதிடர்' - ஊத்துக்குளி வெற்றிவேல், ரிக்கி ராதன் பண்டிட் ஆன கதை!

தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், முதல்வர் விஜய் அவர்களின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின... மேலும் பார்க்க

‘ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை’ – வானதி சீனிவாசன் சாடல்

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை வாழ்த்தி பேசிய எதிர்க்க... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா... சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி ஊராட்சியில், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது `அம்மா’ பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் நடைப்பயி... மேலும் பார்க்க

"திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை" - வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ராஜினாமா

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காங்கிரஸ் கட்சியில் பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணவேணி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது ... மேலும் பார்க்க