செய்திகள் :

"திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை" - வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ராஜினாமா

post image

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காங்கிரஸ் கட்சியில் பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணவேணி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக (District Councillor) 8-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராகவும் (District Panchayat Deputy Chairman) தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணவேணி.

காங்கிரஸ் கிருஷ்ணவேணி
காங்கிரஸ் கிருஷ்ணவேணி

இந்த நிலையில், தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி த.வெ.க ஆட்சியமைக்க காங்கிரஸ் கைகொடுத்ததால், தி.மு.க ஆதரவில் தனக்குக் கிடைத்த மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் கிருஷ்ணவேணி.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

''த.வெ.க-வுடன் நாங்கள் இணைந்ததால், தி.மு.க ஆதரவில் கிடைத்த பதவியில் தொடர எனக்கு விருப்பமில்லை. எனவேதான் என்னுடைய பதவியை மனப்பூர்வமாக முன் வந்து ராஜினாமா செய்கிறேன்'' என்கிறார் கிருஷ்ணவேணி.

தவெக: ``திரைமறைவு பேரமா? விஜய் அடுத்த எம்.ஜி.ஆரா? ஆட்சியில் பங்கு?" - திருமாவளவனின் 'பளீச்' பதில்கள்

தவெக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விசிக கட்சிகளின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகே மூன்று கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளியி... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா... சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி ஊராட்சியில், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது `அம்மா’ பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் நடைப்பயி... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு விவகாரம்: மே 3ல் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து! - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, கடந்த மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளங்கலை) தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள... மேலும் பார்க்க

'செந்தில் பாலாஜியோடு தனியே என்ன பேசினீர்கள் என்பதையும்.!' - சி.வி சண்முகம் தரப்புக்கு அதிமுக பதிலடி

அதிமுகவில் கலகக்குரல் வெடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் ஒரு குழு என அதிமுக இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ... மேலும் பார்க்க

'ஆளும்கட்சி உறுப்பினர்களை விட மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம், அதனால்.!'- ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகத் தேர்வாகி இருக்கும் ஜே.சி.டி.பிரபாகருக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக... மேலும் பார்க்க

"நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தாம்; ஆனால்" - உதயநிதி பேச்சைக் கேட்டு சிரித்த விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வக... மேலும் பார்க்க