செய்திகள் :

திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கோயில் திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை| சித்தரிப்பு படம்
கூட்டுப் பாலியல் வன்கொடுமை | சித்தரிப்பு படம்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அளிக்கிறது. இத்தகைய கொடூரங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முழுமையான சான்றாகும்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்பது இல்லாத ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், குற்றவாளிகளிடையே சட்டம் மற்றும் காவல்துறை மீதான பயமின்மை போன்றவற்றால் தமிழகம் இருண்ட படுகுழியில் வீழ்ந்திருக்கிறது.

இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்க இன்னும் சில காலம் எடுக்கும். தமிழகத்தை இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளியது இந்த திமுக ஆட்சிதான்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும... மேலும் பார்க்க

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" - ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது. இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரி... மேலும் பார்க்க

'ஒரு தொகுதியில் ஒரே பேர்ல 10 வேட்பாளர்கள் இருந்தாலும் குழப்பம் இருக்காது' - தேர்தல் ஆணைய ஏற்பாடுகள்

இன்னும் இரண்டு நாள்களில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். வாக்காளர்களுக்கு வசதியாக தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள சில ஏற்பாடுகள் குறித்து பார்ப்போம்.1. செல்போன்களுக்கென டோக்கன் வசதி:பொதுவாக வ... மேலும் பார்க்க

'எல்லா வலியையும் நெருக்கடியையும் உங்களுக்காகதான் தாங்கிட்டு இருக்கேன்.!' - விஜய் உருக்கம்!

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்றோடு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு உருக்கமாக ஒரு கடிதத்தை எழுதியிர... மேலும் பார்க்க