செய்திகள் :

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் - யார் அந்த ஹீரோ?

post image

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் கூடியிருந்தனர்.

அப்போது இரண்டு நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகவும், மற்றொரு நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sydney: காவல்துறை
Sydney: காவல்துறை

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி பலரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட,
``ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடக் கூடியிருந்த யூதர்கள் மீது நடத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் தாக்குதலின் போது, அந்த மனிதரின் துணிச்சலான செயல்கள் பல உயிர்களைக் காப்பாற்றின'' என அந்த நபரைப் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டைத் தடுத்த அந்த மர்ம நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்தியவரைத் தடுத்து நிறுத்தியவர் அஹமது அல் அஹமது (43). சிட்னியைச் சேர்ந்த அஹமது அல் அஹமது, சதர்லேண்டில் ஒரு பழக்கடை வைத்திருக்கிறார். இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தடுக்கும் முயற்சியில் அவர்மீதும் இரண்டு குண்டுகள் பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். அஹமது அல் அஹமது குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் பேசிய அவரது உறவினர் முஸ்தபா,
``அஹமது அல் அஹமது பழக்கடை வைத்திருக்கிறார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.''

துப்பாக்கிப் பயன்படுத்துவது தொடர்பான எந்த அனுபவமும் அவருக்கு இருந்ததில்லை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் துணிவுடன் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்துள்ளார்.

அவர்மீது குண்டுகள் பாய்ந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் அஹமது அல் அஹமதுதான் உண்மையில் ஹீரோ. அவர் நலமாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “இந்த துப்பாக்கிச் சூட்டைத் தடுத்தவர்கள் அனைவரும் ஹீரோக்கள்” எனப் பாராட்டியிருக்கிறார்.

பான்டி கடற்கரை அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ்,
``நான் இதுவரை பார்த்திராத மிகவும் நம்பமுடியாத காட்சி இது. சமூகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை எதிர்த்து, எண்ணற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தனது சொந்த உயிரைப் பணயம் வைத்து, தனியொரு ஆளாக அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறித்துள்ளார்.

அந்த மனிதர் ஒரு உண்மையான நாயகன். அவருடைய வீரத்தின் விளைவாக இன்று பல மக்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.'

சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ்
சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ்

இந்தக் கொடூரமான சூழலிலும், முற்றிலும் அறிமுகமில்லாதவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கும் அற்புதமான, துணிச்சலான ஆஸ்திரேலியர்கள் இன்னும் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை அஹமது அல் அஹமது வை "பல உயிர்களைக் காப்பாற்றிய ஒரு நாயகன்" என்று குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதா... மேலும் பார்க்க

Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' - பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்துக்கு என்ன பிரச்னை?

இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் ... மேலும் பார்க்க

சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ

பிரேசில் நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தானாகவே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த நவம்... மேலும் பார்க்க

Rage Bait: 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை; `இது வெறும் சொல் அல்ல' - எச்சரிக்கும் ஆக்ஸ்போர்ட்!

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்போர்ட் அகராதி ஒரு சொல்லைத் தேர்வு செய்து அதை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக அறிவிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு "ரேஜ் பெய்ட்" (Rage Bait) என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருக... மேலும் பார்க்க

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்' எனச் சேர்த்திருக்கிறேன்" - எலான் மஸ்க்

"WTF is" பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன்... மேலும் பார்க்க

`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன நம்பரும்!

ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்சி வாகன எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்... மேலும் பார்க்க