செய்திகள் :

தூத்துக்குடி: `எவ்வளவு சொல்லியும் கேட்கல' - திருமணம் மீறிய உறவால் அக்காவை கொன்ற தம்பி

post image

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரும், ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இதனிடையே கருத்துவேறுபாடு காரணமாக கணவ ந் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுமித்ரா, புளியங்குளத்திலுள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

செய்துங்கநல்லூர் காவல் நிலையம்

நேற்று நள்ளிரவு சுமார் 11 மணியளவில் சுமித்ராவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளர்கள் சென்று பார்த்தபோது சுமித்ரா ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை யாரோ வீடு புகுந்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்தது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், சுமித்ராவின் உடன்பிறந்த தம்பி மற்றும் மற்றொருவர் கூட்டாக இந்த கொலையை செய்துள்ளது தெரிய வந்தது. பின்னர், சுமித்ராவின் தம்பி முத்துராஜாவை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள வசந்தை போலீஸார் தேடி வருகின்றனர். முத்துராஜாவிடம் நடத்திய விசாரணையில், “எனது அக்கா அவரது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக சிலர் என்னிடம் கூறினார்கள்.

செய்துங்கநல்லூர்

இதனால் அவரை கண்டித்தேன். பலமுறை கூறியும் தகாத உறவை அவர் கைவிடவில்லை. புளியங்குளத்திலிருந்து செய்துங்கநல்லூருக்கு வந்த போதிலும், அவர் வீட்டிற்கு சிலர் வந்து செல்வதாக எனக்கு தகவல் வந்தது. அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். என் நண்பர் வசந்த்தை அழைத்துக்கொண்டு அக்கா வீட்டிற்கு சென்றேன். வசந்த் வீட்டின் வெளியே காவலுக்கு நின்றான். வீட்டிற்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த அக்காவை எழுப்பி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

ரூ.17 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருள் - தீயிட்டு அழித்த வேலூர் போலீஸ்

வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட 18 `குட்கா’ வழக்குகளில் 1,765 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதன் மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாய் என்கிறது போலீஸ். இ... மேலும் பார்க்க

மும்பை: விளையாடச் சென்ற இடத்தில் தகராறு; ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவன்; என்ன நடந்தது?

மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வந்தவர் சித்தார்த்(14). 8வது வகுப்பு படிக்கும் சித்தார்த், தான் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை.அவனது பெற்றோர் பல... மேலும் பார்க்க

`நான் இஸ்ரோ விஞ்ஞானி'- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்... சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட... மேலும் பார்க்க

திருமணத்தை மறைத்து உறவில் இருந்த காதலன்; அதிகாலையில் காதலி செய்த பகீர் சம்பவம்!

டெல்லியை சேர்ந்த அமீனா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விசர்ஜீத் என்ற நபரை காதலித்து வந்தார். விசர்ஜீத் அடிக்கடி தனது காதலியை சந்திக்க டெல்லி வருவது வழக்கம். இரண்டு... மேலும் பார்க்க

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீ... மேலும் பார்க்க

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி. நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..."செபியின் லெட்டர்பேடைப் ப... மேலும் பார்க்க