செய்திகள் :

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

post image

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " மகளிர் நலனுக்காவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று நான் கையெழுத்திட்டு தருகிறேன். நாட்டை தெற்கு வடக்கு என்று பிரிப்பதை ஏற்க முடியாது. பிரிவினை அரசியல் இங்கு எடுபடாது. மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு எவ்வித பாகுபாட்டையும் பார்க்கவில்லை.

கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இந்த ஐந்து மாநிலங்களின் பலம் தற்போதுள்ள 543 நாடாளுமன்ற இடங்களில் 129 ஆகும். ஆனால் தொகுதி மறுவரையறை செய்த பிறகு இந்த ஐந்து மாநிலங்களுக்கும் இடங்களை ஒதுக்கீடு செய்யும்போது, அது 129-லிருந்து 195-ஆக உயரும்.

அமித்ஷா
அமித்ஷா

இதனால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாது. அதனால் தென் மாநிலங்களுக்கு அநீதி இல்லை. தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்று எழுத்துபூர்வமாக உறுதி அளிக்க தயாராக இருக்கிறோம். தொகுதிகளில் மக்கள்தொகை வேறுபாடு உள்ளதால் மறுவரையறை என்பது முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிட்டது; ஆனா, எங்க கப்பற்படை அங்கே தான் இருக்கும்" - ட்ரம்ப்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மூடிய ஹார்முஸ் ஜலசந்தியை இன்று தான் முழுமையாக திறப்பதாக அறிவித்திருக்கிறது ஈரான்.இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்..."ஹார்முஸ் ஜலசந்தி இப்போது... மேலும் பார்க்க

'பேமென்ட் 1 லட்சம்; 2 AC ரூம் கட்டாயம்' - பில் போடும் நாஞ்சில் சம்பத்? ; விழிபிதுங்கும் தவெகவினர்!

தவெகவின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் வாகன பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேச விதிக்கும் கண்டிஷன்களாலும் பாக்கெட்டை பதம் பார்க்கும் அளவுக்கு போடும் பில்லாலும் தவெக வேட்பாளர்களும் நிர்வாக... மேலும் பார்க்க