செய்திகள் :

தெலங்கானா : `கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம்' என 500 தெருநாய்களை கொன்ற பஞ்சாயத்து தலைவர்கள்

post image

தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்டவர்கள் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தெருநாய்கள் மற்றும் குரங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று குறிப்பிட்டு இருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பஞ்சாயத்து தலைவர்கள் தாங்கள் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கி இருக்கின்றனர்.

ஹேனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள சயாம்பேட், அரேபல்லி ஆகிய இரண்டு பஞ்சாயத்து பெண் தலைவர்கள், அவர்களின் கணவர்களுடன் சேர்ந்து 300 தெரு நாய்களை கொன்று குவித்துள்ளனர். இது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மேலும் 200 தெருநாய்களை கொன்று புதைத்துள்ளனர். இது தொடர்பாக 5 பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொன்று புதைக்கப்பட்ட தெருநாய்களை தோண்டி எடுத்து அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.

பஞ்சாயத்து தலைவர்கள் தாங்கள் தேர்தலின் போது பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இது போன்று தெருநாய்களை கொன்று குவித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் இக்காரியத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் அடுலபுரம் கௌதம், மச்சரெட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ``காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா மண்டலத்தின் ஐந்து கிராமங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களில் சுமார் 200 தெருநாய்கள் கொல்லப்பட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாக" தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஐந்து கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களின் உத்தரவின் பேரில் இந்தக் கொலைகள் நடந்துள்ளதாகவும், அவர்கள் விஷ ஊசிகளைச் செலுத்தி நாய்களை கொன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.

தான் பவானிபேட்டை கிராமத்திற்குச் சென்றபோது, ​​அங்கு நாய்களின் சடலங்கள் கிடந்ததை கண்டதாகவும், இதே போன்ற கொடூரச் செயல்கள் பல்வஞ்சா, ஃபரித்பேட், வாடி மற்றும் பந்தரமேஸ்வரபள்ளி ஆகிய கிராமங்களிலும் நடந்துள்ளதாகவும் கௌதம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான விதிமுறைகள் சரியாக செயல்படுத்தப்படாதது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாய் கடி சம்பவங்களுக்கு மாநிலங்கள் கணிசமான இழப்பீடு வழங்கவும், நாய் கடிகளுக்கு நாய்களுக்கு உணவளிப்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய உத்தரவிடுவது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.!

`அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை' - மோடி குறித்து கேள்வி; இங்கிலாந்து டாக்டருக்கு நிகழ்ந்தது என்ன?

இங்கிலாந்தில் டாக்டராக இருப்பவர் சங்க்ராம் பாட்டீல். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் என்ற இடத்தை சேர்ந்த சங்க்ராம் பாட்டீல் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழ்ந்து குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டா... மேலும் பார்க்க

'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் கடத்திய கும்பல்

மும்பை அந்தேரி ஜுகு பகுதியில் வசிக்கும் மோனில் என்பவர் ஜாபர் குரேஷி என்பவரிடம் ரூ.80 லட்சத்தை 30 சதவீத வட்டிக்கு வாங்கி இருந்தார். ஆனால் மோனல் குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்ல... மேலும் பார்க்க

ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் 17 வயது சிறுவன் ஓட்டம்; 3 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் வசிப்பவர் சுஹாஷ் (48). மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோடு அருகே ஸ்ரீ கிருஷ்ணா டெஸ்டிங் ஏஜென்சி என்ற பெயரி... மேலும் பார்க்க

ம.பி: 145 வழக்குகளில், 6 பேரை மீண்டும் மீண்டும் அரசு சாட்சிகளாக நிறுத்திய காவலர் - சாட்சி மோசடி

மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸார் வழக்குகளில் அரசு சாட்சிகளை சேர்ப்பதில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுவாக வழக்குகளில் அரசு சார்பாக சாட்சி சொல்ல யாரும் வரமாட்டார்கள்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீழ வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் இன்பரசன் (வயது: 25). இவர், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார்.மேலும், இவர் ஜல்லிக்கட்டு காளைய... மேலும் பார்க்க

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க