செய்திகள் :

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' - போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

post image

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.அண்ணாவின் குடும்பத்தினர் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

அண்ணாமலை

அண்ணாவுடையே குடும்பத்தினர் யாரும் அரசியல் பக்கமே வருவதில்லை. கருணாநிதியின் மகன், பேரன், கொள்ளு பேரன் வரை அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.  திமுக அமைச்சர்களுக்கு அண்ணாவை பற்றி 10 வரிகள் கூட எழுதத்தெரியாது.

என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்றும் தெரியவில்லை. அதற்கு காலமும், நேரமும் தான் பதில் சொல்லும்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

இதன் காரணமாக சிங்காநல்லூர், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இதைப்பற்றி எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் சொல்லியுள்ளேன்.  

விஜய்யிடம் இன்ஜினே இல்லை

விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். நான் அவரை அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. எங்களிடம் டபுள் இன்ஜின் உள்ளது. விஜய்யிடம் இன்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல் எதுவும் இல்லை. வண்டியை இயக்கவும் யாரும் இல்லை. 234 தொகுதிகளுக்கு விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா.

விஜய்
விஜய்

தொண்டர்களிடம்  கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விஜய் பேசுகிறார். மக்களுக்கு என்ன திட்டம் கொண்டு வரப் போகிறோம் என்று சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை” என்றார்.

`ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' - தேர்தல் ஆணையரை சாடும் மம்தா

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் ... மேலும் பார்க்க

``இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்?" - விசிக தலைவர் திருமாவளவன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது... மேலும் பார்க்க

"குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!"- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடங்க விழா நேற்று (பிப். 2) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்ற... மேலும் பார்க்க

"என்னென்ன அமெரிக்கப் பொருட்களுக்கு ஒப்புதல் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லுங்கள்" - சு.வெங்கடேசன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது... மேலும் பார்க்க