செய்திகள் :

"குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!"- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடங்க விழா நேற்று (பிப். 2) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்று அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (பிப்.3) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் தவெக விஜய்
தவெக விஜய்

வெள்ளையா? கருப்பா?

அதற்கு பதிலளித்த அவர், "விஜய் தனது சம்பளம் எவ்வளவு என தெளிவுப்படுத்த வேண்டும். விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

நான் இவ்வளவு தான் சம்பளம் வாங்கினேன், இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன் என்று விஜயால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டும்.

தவெக கட்சி யாருடைய பணத்தில் நடக்கிறது? லாட்டரி பணத்தில் இருந்து தான் நடக்கிறது.

கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. கொஞ்சம் கூட ஒரு குற்ற உணர்வு இல்லாமல் மூன்றாவது ஆண்டு கட்சி தொடக்க விழாவில் வந்து டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவிற்கு மனக்கஷ்டப்படும் என்று தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத விஜய்க்கு தவெகவின் தலைவராக இருக்கக்கூடிய அருகதை இல்லை. தவெகவினர் ஆபத்தில் இருக்கின்றனர். அதனால் தான் தங்களைக் காப்பாற்ற விசில் அடிக்கின்றனர்.

போட்டி என்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மட்டும்தான். அதிமுகவை தொட்டால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

`திமுக-வில் இணைவது பற்றி, இன்னும் முடிவு பண்ணல..!’ - அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான நிலோஃபர் தி.மு.க-வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜோலார்பேட்டை பொன்னேரியில், வரும... மேலும் பார்க்க

வானதி, சீமான், அண்ணாமலை, பொன்முடி... தொகுதி மாற திட்டமிடும் வி.ஐ.பி வேட்பாளர்கள்! பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் பல அரசியல் பிரபலங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் என அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இந்தப் பட்டிய... மேலும் பார்க்க

`ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' - தேர்தல் ஆணையரை சாடும் மம்தா

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் ... மேலும் பார்க்க

``இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்?" - விசிக தலைவர் திருமாவளவன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது... மேலும் பார்க்க

"என்னென்ன அமெரிக்கப் பொருட்களுக்கு ஒப்புதல் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லுங்கள்" - சு.வெங்கடேசன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது... மேலும் பார்க்க

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' - போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.அண்ணாவின் குடும்... மேலும் பார்க்க