செய்திகள் :

``நடிகர் விஜய் பலவீனமானவர், பிரச்னை வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'' - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

post image

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழக அரசின் அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக்கூட மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது.

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பவ இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காமல், அவரது வீட்டில் போய் அமர்ந்து கொண்டவர் நடிகர் விஜய். இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு

முதல்வரிடம் குறுகிய எண்ணம் கிடையாது.தொலைநோக்குப் பார்வை உள்ளது. ஒருவரை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்திருந்தால், அன்றே அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்.

`எந்த அரசியல் தலைவர்களும் தன் தொண்டர்களை அழைத்து வந்து கொலை செய்ய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். அந்த அடிப்படையில்தான் விஜய்யை பார்க்கிறேன்' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் செய்தது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள்.

41 பேர் உயிரிழந்தவுடன் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்தவர்கள், நானும் ரெளடிதான் என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு

கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் வழங்கியது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள்.

41 பேர் உயிரிழந்தவுடன் 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என ஓடி ஒளிந்தவர்கள், 'நானும் ரெளடிதான்' என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள்.

நடிகர் விஜய் பலவீனமானவர். ஒரு பிரச்னை வந்தால், அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஓடி ஒளிந்துக் கொள்கிறார்கள். பலவீனமானவர்கள் தங்களை வீரன் எனக் காட்டிக் கொள்ள எதையாவது சொல்லிக் கொள்வார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்பது வரலாற்றில் உள்ளது,” என்றார்.

``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.``பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணி... மேலும் பார்க்க

கொடநாடு கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா* வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? * "ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும்... மேலும் பார்க்க

``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 7) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.“2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார். கூட்டணிக்கு மத... மேலும் பார்க்க

ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன.தென் கொரிய... மேலும் பார்க்க

`சிலையா, அரசியலா?’ - பட்டுக்கோட்டை அரசுப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு முட்டுக்கட்டைப் போடுவது யார்?

பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டு பழமையானது. தற்போது சுமார் 2,500 மாணவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர்... மேலும் பார்க்க