செய்திகள் :

நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம்

post image

நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.

நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, நாமக்கல் நோக்கி எதிர்புறத்தில் சாக்குப் பை ஏற்றி வந்த மினி வேனும், டேங்கர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

அப்போது, மினி வேனுக்குப் பின்னால் வந்த இருசக்கர வாகனமும் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், ஜெய்நகரைச் சேர்ந்த சேனாதிபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மினி வேனை ஓட்டி வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

விபத்து
விபத்து

இந்த விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் மினி வேனில் வந்த மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?

கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! - விவரம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இ... மேலும் பார்க்க

கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர்! - 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

கோவை கொடிசியா மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீருற்று மற்றும் பல்வேறு விதமான ராட்டினங்கள் வைக்கப்பட்டுள்ளன.கோவ... மேலும் பார்க்க

ஹீலியம் சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்? தொடர் விபத்துகளால் பலூன் வியாபாரிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை

கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள். குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: "விசித்திரமான விபத்து" - மோதிக்கொண்ட ரயில்கள்; 21 பேர் பலி; அரசு சொல்வது என்ன?

ஸ்பெயினில் நேற்று இரவு இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து தென் ஸ்பெயினில் உள்ள அடமுஸ் நகரத்திற்கு அருகே நடந்துள்ளது.மலகாவில் இருந்து மாட்ரிட்டிற்குச் சென்று கொண்டிருந்த அதி... மேலும் பார்க்க

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித... மேலும் பார்க்க