செய்திகள் :

"நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேன்; இப்போது காலன் வந்தாலும் தயார்"- தெ.ஞானசுந்தரத்திற்கு அரசு மரியாதை

post image

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் உடல் இன்று சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் இழப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்குப் பேரிழப்பு என்றால் மிகையில்லை.

கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர். கம்பர் தாண்டி வால்மிகி ராமாயணத்தையும் கற்றறிந்து வைத்திருந்தார். 'கூடுதலாக ஒரு மொழி கற்றுக் கொண்டால் நல்லதுதானே' என மலையாளமும் கற்றிருந்தார். வைணவ இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் என எதையும் விட்டு வைக்காதவர்.

இவரது உரை கேட்டோர், அந்த அனுபவங்களை விவரிப்பதே அவ்வளவு அழகாக இருக்கும். 'மேடையில் அவர் பேசினால், அது பொது நிகழ்ச்சி என்றாலும் எதிரே அமர்ந்திருப்பவர்கள் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல அத்தனை அமைதியாக உட்கார்ந்து கவனிப்பார்கள்' என்கிறார், கவிஞர் பிருந்தா சாரதி.

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

"கம்பனைப் பாடியவர், வைணவத்தைக் குறைவில்லாது ஊட்டியவர். அவருக்கு ஈடு இணை இல்லை ஒருவரே உலகில்" என்கிற பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கையையும் வைத்திருந்தார்.

இரு வாரங்களுக்கு முன் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவருடன் பொங்கல் கொண்டாடியதை நினைவுகூர்ந்த முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன், அந்தக் கொண்டாட்டங்களின் ஊடே, தெ.ஞா பேசிய சில வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதா சேஷய்யன்
சுதா சேஷய்யன்

‘தற்போது என்ன நூல் எழுதுகிறீர்கள் அல்லது திட்டமிட்டிருக்கிறீர்கள்?’ என்று அங்கு அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்..

"நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டேன். நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்; இப்போது காலன் வந்தால்கூட வரவேற்பேன்", என்பதுதானாம்.

மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' - நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரய... மேலும் பார்க்க

சென்னை புத்தகக் காட்சி நிறைவு; இவ்வாண்டு அதிகம் விற்பனையான முதல் 5 புத்தகங்கள் என்னென்ன தெரியுமா?

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 49 வது சென்னை புத்தகக் காட்சி 8 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே நூல் வெளியீடுகளும், இலக்கிய அமர்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் ... மேலும் பார்க்க

வேங்கைநேரி: `அந்தப் புத்தகம் எனக்குள் கடத்திய வலி...' - இளம் எழுத்தாளர் நிகேஷ்

49-வது சென்னை புத்தகக் காட்சி ஒரு வாரத்தைக் கடந்து தற்போது நிறைவடைந்துள்ளது. வாசகர்களின் நிறைவு கட்ட புத்தக நுகர்வும், புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வேங்கைநேரி நாவல் வ... மேலும் பார்க்க

Chennai Book Fair : கருநாக்கு, முள்ளிப்புல்... மிஸ் பண்ணக் கூடாத 5 கவிதைத் தொகுப்புகள்!

கருநாக்கு கருநாக்கு - முத்துராச குமார்முத்துராச குமாரின் படைப்பு நிலத்தையும் தொன்மங்களையும் மையமிட்டு எழுந்தாலும், எந்த இடத்திலும் நிலப்பெருமிதம் கொள்ளாமல், நிலத்தின் மீதிருக்கும் முரண்பாடுகளையும், சா... மேலும் பார்க்க

`சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம்.!' - எழுத்தாளர் ய.மணிகண்டன்

49-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இந்தப் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் நூல் பதிப்பியல் துறையில் நிபுணருமான சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி ... மேலும் பார்க்க