செய்திகள் :

பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; 3-வது நாளாக நீடிப்பு!

post image

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், சமயபுரம் பள்ளிவிடை பாலம் சர்வீஸ் சாலை அருகே விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், உழவர் உரிமை இயக்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்பட 40 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்நாள் போராட்டம் தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் காந்திராஜ், வினோத், ரமேஷ் ஆகியோரும், கூட்டுறவு பதிவாளர் மற்றும் ஆட்சியர் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

protest

இதனால், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று இரண்டாம் நாள் போராட்டத்தை தொடர்ந்தவர்கள், இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் இரவு பகலாக அங்கேயே முகாமிட்டு உள்ளனர். நாளை விவசாயிகள் குழு சென்னை சென்று இது சம்பந்தமாக அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. தங்கள் கோரிக்கையை முழுமையாக அரசு நிறைவேற்றும் வரையில், போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெல்லை: கொட்டித் தீர்த்த கனமழை; திறக்கப்படாத கொள்முதல் நிலையங்கள் - சேதமான நெல் மூட்டைகள்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல மாதங்களாக வயலில் உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயி... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய முதல்வர்... விவசாயிகளுக்கு நிம்மதி தந்த இரட்டை அறிவிப்புகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதலில் நடைபெறும் ஊழல் ஒழிக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் வாங்கிய கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட... மேலும் பார்க்க

அமெரிக்க கம்பெனி வேலையை உதறிவிட்டு முருங்கை விவசாயம் - ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்!

மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகள் பலர் விவசாயத்தை நவீன முறையில் பெரிய அளவில் செய்வது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குருத்வாடி என்ற இடத்தை சேர்ந்த சாகர் காரே என்ற மெக்கானிக்க... மேலும் பார்க்க

Mettur: வினாடிக்கு 7,000 கன அடி; 8 கண் மதகுகள் வழியாக சீறிப்பாயும் நீர் - கழுகு பார்வைக் காட்சிகள்!

மேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வை... மேலும் பார்க்க