செய்திகள் :

பிஎம் கிஷான் திட்டத்தில் சீர்திருத்தம் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, ‘பிஎம் கிஷான்’ என்ற பெயரில் உழவர்கள் வெகுமதித் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒவ்வொரு விவசாயிக்கும் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையில் ஒரு ரூபாய்கூட உயர்த்தப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வேளாண் இடுபொருள்களின் விலை, பண்ணைக் கருவிகளின் வாடகை மற்றும் விவசாயப் பணியாளர்களின் ஊதியம் ஆகியவையும் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், மத்திய அரசு இவற்றைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தொடக்க நிலையில் அறிவிக்கப்பட்ட 6,000 ரூபாயைத்தான் இன்று வரையிலும் வழங்கி வருகிறது. ‘இது எந்தவிதத்தில் நியாயம்?’ என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

‘இன்றைய நிலவரப்படி ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது கொடுத்தால்தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்தத் தொகையை வழங்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

இந்தத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் புறக்கணிக்கப்படுவது மிகவும் வேதனையான விஷயம். சொந்த நிலம் வாங்குவதற்கு வசதியில்லாத விவசாயிகள்தான், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். பிஎம் கிஷான் திட்டத்தில் நிதியுதவி கிடைப்பதென்பது, இவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு உதவித் திட்டத்தை மறுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

இந்தியாவில் 2 கோடியே 29 லட்சம் விவசாயிகள் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4 லட்சம் விவசாயிகள் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்துக் குத்தகை விவசாயிகளுக்கும் பிஎம் கிஷான் திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான், விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட செயல்பாடு.

நிதியை உயர்த்தி வழங்குவதும், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர் களையும் இந்தத் திட்டத்தில் இணைப்பதும் காலத்தின் கட்டாயம். ஆட்சியாளர் களின் கடமையும் கூட!

- ஆசிரியர்

பசுமை சந்தை!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

”பயிர்க்கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” - விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாய... மேலும் பார்க்க

`கிலோ 5 ரூபாய்க்கு விற்கும் மாம்பழம்' குப்பையில் கொட்டும் விவசாயிகள் - திண்டுக்கல்லில் தொடரும் சோகம்

தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழங்களும், ... மேலும் பார்க்க

'ஐந்து மாவட்டங்களின் உயிர்நாடி வைகை அணை' - வறட்சி கோலத்தால் விவசாயிகள் வேதனை | Photo Album

வைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை; ஏராளமான மரங்கள், மின் கம்பிகள் சேதம் | Photo Album

ஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோட... மேலும் பார்க்க