செய்திகள் :

புதுச்சேரி: `அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைக்குமா?'- `பட்ஜெட்’ பொதுநல வழக்கால் சிக்கல்

post image

புதுச்சேரியில் நடந்துமுடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்றார் ரங்கசாமி. அதையடுத்து தவணை முறையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் ஜி.என்.எஸ் ராஜசேகரன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

அதையடுத்து தங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறை பதவியை ஒதுக்க வேண்டும் என்றும்,  அத்துடன் சபாநாயகர் பதவியும் வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க.

அதனால் அமைச்சர்கள் பதவியேற்று மூன்று மாதங்களைக் கடந்தும், அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதையடுத்து பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தின் காரணமாக உள்துறையை பா.ஜ.க-வுக்கு கொடுக்க சம்மதித்தார் முதல்வர் ரங்கசாமி.

முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர்கள்
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சர்கள்

அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு ஒப்புதல் கொடுத்தார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். இலாகாப் பட்டியல் முடிவுக்கு வந்ததும், சபாநாயகர் பதவி வேண்டும் என்று மீண்டும் அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால் பா.ஜ.கவை விட அதிக இடங்களில் வெற்றிபெற்ற தங்களிடம்தான் சபாநாயகர் பதவி இருக்க வேண்டும் என்று நினைக்கும் முதல்வர் ரங்கசாமி, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த உரசலால் தற்போது வரை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. சபாநாயகருக்கான தேர்தலை ஜூலை 2-ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கேட்டு, கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு கோப்பை அனுப்பியது சட்டப்பேரவைச் செயலகம்.

ஆனால் சபாநாயகர் பதவியை பா.ஜ.க-வுக்கு தருவதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொள்ளாத நிலையில், இரண்டு மாதங்களாக அந்தக் கோப்பு ஆளுநர் மாளிகையின் பரிசீலனையில் (!?)இருக்கிறது.

இந்த நிலையில்தான் நாளை மறுதினம் ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, `சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை, அவருக்குரிய அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கு இருக்கிறது' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் துணை சபாநாயகர் அன்பழகன்.

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளரான அன்பழகன், உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏ. இதற்கிடையில், ``என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தால், தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று மாதங்களைக் கடந்தும் இன்னும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.

அப்படி இருக்கும்போது தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தாமல், பட்ஜெட் கூட்டம் நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதனால் அந்தத் தேர்தலை நடத்துவதைத் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும் சட்டசபையைக் கூட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணி. அந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு வந்தது.

அப்போது, அந்த மனுவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் சட்டசபைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் முடிகிறது. அதற்கு முன்பாகவே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

"மறைக்கத் தேவையில்லை; நம் தோல்விக்கு நிர்வாகிகளும் காரணம்; அதனால் தான்.!" - ஸ்டாலின் ஓப்பன் டாக்

இன்று சென்னை அறிவாலயத்தில் திமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்வு, மா.செக்களின் அதிகபட்ச வயது 70 போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்தக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

‘இந்தியாவிலேயே எங்கும் 'இது' நடந்திருக்காது; தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்' - பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக இடதுசாரிகளுக்கு எதிரான சில காட்சிகள் அரங்கேறின.இதை எதிர்த்து இன்று (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

`இனி மா.செ எண்ணிக்கை 110... அதிகபட்ச வயது 70; பதவிகளுக்கு புது ரூல்ஸ்!' - திமுக செயற்குழுவில் அதிரடி

தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று - திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும்.இந்த மாதிரியான... மேலும் பார்க்க

"சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்" - சென்னை தினத்தில் ஸ்டாலின்

இன்று சென்னை தினம். அதுவும் 387-வது சென்னை தினம். சென்னை தினம் குறித்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு..."இருப... மேலும் பார்க்க

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' - ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தச் சந்திப்பில் இருவரும் சட்டமன்றம் குறித்துப் பேசிக்கொண்டதைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.வைரமுத்துவின் பதி... மேலும் பார்க்க

கனடா குருத்வாராவில் தாக்குதல்: 2 பேர் காயம்; ஒருவர் கைது - Ideology கிரைமா இது?

கனடாவின் உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 5 மணிக்கு, எட்மன்டனின் உள்ள நானக்சர் குருத்வாராவில் தாக்குதல் நடந்துள்ளது.இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்திற்குக் கா... மேலும் பார்க்க