செய்திகள் :

"பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலையில்லை; ஈரானை வீழ்த்துவதே இலக்கு!" - அதிபர் ட்ரம்ப் உறுதி

post image

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் பெட்ரோலின் சராசரி விலை கடந்த வாரத்தில் 27 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கேலன் பெட்ரோல் சுமார் $3.25 (சுமார் ரூ.270) ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 காசுகள் அதிகமாகும். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``பெட்ரோல் நிலையங்களில் விலை உயர்வது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. போர் முடிந்ததும் விலைகள் தானாகவே மிக விரைவாகக் குறைந்துவிடும். பெட்ரோல் விலைகள் ஒன்றும் அந்த அளவிற்கு அதிகமாக உயரவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மேலும், பெட்ரோல் விலை சிறிது உயருவதை விட, இந்த ராணுவ மோதலில் நாம் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானது. விலை உயர்வைக் குறைக்க அமெரிக்கா வசம் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பான மூலோபாய பெட்ரோலிய ரிசர்வ்லிருந்து (Strategic Petroleum Reserve) எண்ணெயை வழங்கும் திட்டம் எதுவுமில்லை. ஈரான் முற்றுகையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்துத் தொடரும்" என்றார்.

எண்ணெய் விலை உயர்வு குறித்து அதிபர் ட்ரம்ப் கவலைப்படவில்லை என்று கூறினாலும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், எரிசக்திச் செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் பெரிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போனால், அரசு தலையிட்டு விலையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சம... மேலும் பார்க்க

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வ... மேலும் பார்க்க

"இந்தியா எங்களது சந்தையை 'இப்படி' பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை" - அமெரிக்கா

இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது..."20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த... மேலும் பார்க்க

`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்

இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்ய... மேலும் பார்க்க

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யே... மேலும் பார்க்க