செய்திகள் :

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

post image

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

அவர்களது வீடு வனப்பகுதி அருகில் இருக்கிறது. இரவில் சிறார்கள் இருவரும் 8.30 மணிக்குத் தங்களது வீட்டிலிருந்து அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் அப்படிச் சென்றபோது திடீரென அங்கு சிறுத்தைப்புலி ஒன்று வந்தது. அந்தச் சிறுத்தைப்புலி ஸ்வர்வாஞ்சலியின் கழுத்தைக் கடித்து இழுத்துச்செல்ல முயன்றது.

உடனே சுதாரித்துக்கொண்ட சிவம், தனது சகோதரி ஸ்வர்வாஞ்சலியின் கையைப் பிடித்து இழுத்தார். இதில் ஸ்வர்வாஞ்சலியின் கை வழுக்கிக்கொண்டது. சிவம் பிடியிலிருந்து கை நழுவியது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு சிவம் தனது சகோதரியின் காலைப் பிடித்துக்கொண்டு கத்தினார்.

சிறுத்தைப்புலி
சிறுத்தைப்புலி

அவர்களின் சத்தத்தைக் கேட்டு சிவத்தின் தாயார் வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களும் அங்கு வந்தனர்.

அவர்களின் சத்தத்தைக் கேட்டு சிறுத்தைப்புலி பயத்தில் சிறுமியை விட்டுவிட்டு காட்டுக்குள் இருட்டில் தப்பிச் சென்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக சிறுமி குளிருக்காக சுவெட்டர் மற்றும் தொப்பி அணிந்து இருந்தார். இதனால் சிறுத்தைப்புலியின் பல் சிறுமியின் கழுத்தில் ஆழமாகப் பதியவில்லை. ஆனாலும் கழுத்து, கை, முதுகு பகுதியில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டது.

அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிவம் துணிச்சலுடன் செயல்பட்டு இருக்காவிடில் சிறுமியை சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்று இருக்கும்.

அதோடு சிறுமி அணிந்திருந்த சுவெட்டர் மற்றும் தொப்பியும் சிறுமிக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தது. சிறுமியைக் காப்பாற்றிய சிறுவனை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் 11 மாத குழந்தையை சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்றுவிட்டது.

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித... மேலும் பார்க்க

குஜராத் : காந்தி நகர் சபர்மதி ஆற்றங்கரையோரம் 6 ஏக்கரில் புதிய நகரை உருவாக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் கடுமையான கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்து கடனில் இருந்து மீண்டு பல்வேறு விதமான தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப்பச்சன் அதிக... மேலும் பார்க்க

`135 கிலோவில் இருந்து 89 கிலோவாக குறைந்துவிட்டேன்' - அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் ரகசியம்!

மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிதின... மேலும் பார்க்க

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போர... மேலும் பார்க்க

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க