செய்திகள் :

மகாராஷ்டிரா: நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி; அஜித்பவார் மனைவி தேசிய சாதனை!

post image

கடந்த பிப்ரவரி இறுதியில் மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வராக இருந்த அஜித்பவார் அகால மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். அதோடு அஜித்பவார் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராமதி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டார்.

இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் சுனேத்ரா பவார் 1,18.034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 1,18,969 வாக்குகள் பெற்று இருந்தார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்பாளரை நிறுத்தவில்லை.

ராஷ்ட்ரீய சமாஜ் கட்சி வேட்பாளர் குடுகடே 935 வாக்குகள் பெற்று இருந்தார். இது தவிர நோட்டாவிற்கு 774 வாக்குகள் கிடைத்தது. இதற்கு முன்பு பாராமதி தொகுதியில் அஜித்பவார் மற்றும் சரத்பவார் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தனர்.

சுனேத்ரா பவார்
சுனேத்ரா பவார்

அவர்கள் வெற்றி பெற்ற வாக்கு எண்ணிக்கை சதவீதத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுனேத்ரா பவார் வெற்றி பெற்று இருக்கிறார். 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அஜித்பவார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கோபிசந்த் பதல்கரை வீழ்த்தினார்.

அது அப்போது மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வாக்கு வித்தியாச வெற்றியாகக் கருதப்பட்டது. அதே சமயம் 1990ம் ஆண்டு தேர்தலில் பாராமதியில் சரத் பவார் 75% வாக்குகள் பெற்றார். ஆனால் தற்போது சுனேத்ரா பவார் பெற்றுள்ள வெற்றி நாட்டிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

1962ம் ஆண்டு தவிர, பவார் குடும்பம் பாராமதியில் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சரத் ​​பவார் 1967 முதல் 1990 வரை அத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மகன் அஜித் பவார் 1995 முதல் அத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றாலும், சரத்பவார் பெற்ற 75% வாக்கை அஜித்பவார் ஒரு முறைகூட பெறவில்லை. ஆனால் இந்த இடைத்தேர்தலில் சுனேத்ரா 98% வாக்குகளைப் பெற்று, பவாரின் நீண்ட கால சாதனையை முறியடித்தார்.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க