செய்திகள் :

மேற்கு வங்கம்: `ரூ.5-க்கு மீன் சாப்பாடு' - புதிய பா.ஜ.க அரசு அறிவிப்பு!

post image

மேற்கு வங்க உணவில் மீன் பிரதானமாக இடம் பெறுவது வழக்கம். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் வெட்ட தடை விதிப்பார்கள் என்று முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரை செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க தலைவர்கள் பரப்புரையின் போது மீன்கறி சாப்பிட்டு நாங்கள் மீன்கள் வெட்டப்படுவதை தடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். பெங்காலி மக்களுக்கு மீன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல. அது அவர்களின் அடையாளமாக இருக்கிறது. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்றாக இருக்கிறது. ஏழைகளாக இருந்தாலும் அவர்களது வீட்டில் நிச்சயம் மீன் குழம்பு இருக்கும்.

தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க அரசு மக்களை தங்கள் பக்கம் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக மாநிலம் முழுவதும் செயல்படும் அரசு கேன்டீன்களில் மீன் சாப்பாடு வெறும் 5 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அரசின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் மேற்கு வங்கம் முழுவதும் தற்போது அரசு உணவகங்களின் மூலமாகவே செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த உணவகங்கள் தற்போது குறைந்த விலையில் உணவை வழங்குகிறது. இதன் மூலம் பெருமளவிலான தினக்கூலிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், குறைந்த வருவாய் பெறும் குடும்பங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் பயன்பட்டு வருகின்றனர். தற்போது இதில் முட்டையும், சாப்பாடும் ரூ.5க்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனையே மாற்றி அதே கட்டணத்தில் மீன் குழம்பு சாப்பாடும் வழங்க திட்டமிட்டு இருக்கின்றனர். பல சாதாரண பெங்காலி மக்களுக்கு, வெறும் 5 ரூபாய்க்கு பாரம்பர்யமிக்க 'மாச்-பாத்' (மீன்-சாதம்) உணவு திட்டம் வெறு

ம் மானிய விலை உணவாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக, அது பெங்காலி அடையாளத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு வாழ்க்கை முறையை பாதுகாப்பதாகவே பார்க்கப்படுகிறது.

கர்நாடகா: விலக்கப்பட்ட தடை; பள்ளியில் மாணவர்கள் மீண்டும் ஹிஜாப், புனித கயிறு கட்ட அனுமதி!

கர்நாடகாவில் இதற்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவர்கள் யூனிபார்ம் தவிர எந்த வித மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக ஹிஜாப... மேலும் பார்க்க

முதலமைச்சர் விஜய்யின் காஷ்மீர் `லியோ' கஃபே - அலைமோதும் தமிழக சுற்றுலாப் பயணிகள்!

காஷ்மீரின் தெற்குப் பகுதியில், பஹல்காம் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் `சிஃபார் கஃபே' (Sifar Cafe) என்ற உணவகம் அமைந்துள்ளது. இதுதான் தற்போது தமிழ்நாட்டு சுற்றுலாப... மேலும் பார்க்க

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? ஒரே நாளில் ரூ.100 கோடி சம்பாதித்த கும்பல்?

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததால் ஒட்டுமொத்த தேர்வும் ரத்து ... மேலும் பார்க்க

பீகார்: ATM-க்குள் சென்று முடிவெட்டிக்கொள்ளும் மக்கள்; வைரலாகும் ஏடிஎம் சலூன் பற்றி தெரியுமா?

சமீப காலமாக ஆன்லைன் பணப்பரிவத்தனை அதிகரித்து இருப்பதால் மக்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது குறைந்து இருக்கிறது. இதனால் அதிகமான ஏ.டி.எம்.கள் நகரங்களில் மூடப்பட்டு வருகின்றன. சில ஏ.டி.எம்.கள் பணம் நிரப... மேலும் பார்க்க

புனே: "தண்ணீருக்காக தினமும் காட்டுக்குள் 4 மணி நேரம் நடக்கணும்" - பழங்குடியினப் பெண்களின் அவலநிலை

மும்பைக்கு அண்டை மாவட்டமான தானே பகுதியில் இருந்துதான் தண்ணீர் சப்ளையாகிறது. ஆனால் அதே தானே மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தினமும் தண்ணிருக்காக 4 மணி நேரம் நடக்கும் அவல நிலை இருந்து வருகிறது... மேலும் பார்க்க

12 ஆண்டுகள் காத்திருந்த பெண்.... ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!

தம்பதிக்கு எத்தனை வசதிகள், செல்வங்கள் இருந்தாலும் குழந்தை இல்லை என்றால் அது ஒரு மிகப்பெரிய வருத்தமாகவே இருக்கும். எதியோப்பியாவில் ஒரு பெண் திருமணமாகி கடந்த 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார... மேலும் பார்க்க