செய்திகள் :

`யாருக்கும் தெரியாமல் எங்காவது போய் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; பிறந்தநாள் விழா வேண்டாம்' - வைகோ

post image

கட்சிக்காரர்கள் தனக்குத் தெரியாமல் தனது பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அவர்களுக்குப் பொருட்செலவு வைக்க விரும்பாததால் இந்தாண்டு பிறந்த நாளுக்கு ஏற்பாடு செய்திருந்த விழாவை ரத்து செய்வதாக கூறியிருக்கிறார் வைகோ.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

``1944 செப்டம்பர் 22 ம் தேதி பிறந்தேன். பள்ளியில் சேர்க்கிற போது வயது குறைவாக இருந்ததால் 4 மாதங்கள் முன்னதாகச் சேர்த்து மே 22 என சேர்த்து விட்டார்கள். எனவே சான்றிதழில் மே 22 என்றுதான் இருக்கிறது. ஒரு முறை மறைந்த இந்திய பிரதமர் வாஜ்பாய் அந்த தேதியில் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். அவரிடம் உண்மையான தேதியைச் சொன்னதும், ‘என் வாழ்த்துகள் செப்டம்பர் 22 க்குப் போய்ச் சேரட்டும்’ என சொன்னார்.

செப்டம்பர் மாதம் 15ம் தேதிதான் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை மாநாடாக கொண்டாடி வருகிறது மதிமுக.

வாஜ்பாய்

அண்ணாவின் 100 வது பிறந்த நாளை 15ம் தேதிக்குப் பதில் 21 ம் தேதி கொண்டாடியது திமுக. ஆனால் மதுரையில் பிரமாண்டமாக கொண்டாடியவன் இந்த வைகோ. அந்த மாநாட்டில் கலைஞர் பிறந்த நாளை ஜூன் 3 க்குப் பதில் வேறொரு நாள் கொண்டாடுவீர்களா எனக் கேட்டேன்.

அண்ணாவின் பிறந்த நாளுக்கு ஒரு மறு வாரம் என்னுடைய பிறந்த நாள் வருவதால் கட்சியினர் இரண்டு விழாக்களையும் கொண்டாடும் போது பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

எனக்குத் தெரியாமல் இப்படி அவர்கள் சிரமப்படுவது வேதனை தருகிறது. இந்தாண்டும் வைகோ 83 லட்சினையெல்லாம் தயாராகி விட்டதாகச் சொன்னார்கள். ஆனால் என்னால் கட்சியினர் படும் சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே இந்தாண்டு விழாவை ரத்து செய்யச் சொல்லி விட்டேன். தொண்டர்களின் விருப்பத்துக்கு செவி சாய்க்க முடியாத மன வேதனையுடனேயே இந்த முடிவை எடுத்தேன். இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் எனக்கு பிறந்த நாள் விழாக்கள் வேண்டாம்.

வைகோ
வைகோ

இந்த ஆண்டு அந்த நாளில் பிறர் அறியாவண்ணம் எங்காவது போய் அமைதியாக கழிக்க நினைக்கிறேன்.

என் மன அமைதிக்காக இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு தொண்டர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார் அவர்..

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க