செய்திகள் :

ரஷ்யா - உக்ரைன் போர்: "8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த எனக்கு இதை நிறுத்துவது ஈசி" - ட்ரம்ப்

post image

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 4, 2026), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போர் குறித்து போன் காலில் பேசிக்கொண்டனர்.

அதன் பின்னும், ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அவரது பதில்...

"இந்தப் போரை முடிக்க வேண்டும் என்று புதினும் விரும்புகிறார். உக்ரைனும் விரும்புகிறது. நாம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்... இதை நம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடிகிறதா என்று பார்ப்போம். இது ஒரு கொடூரமான விஷயம்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

நான் ஏற்கனவே 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். என் கணிப்புப்படி, இந்தப் போரை முடிப்பது அதைவிட எளிதான ஒன்றாகத்தான் இருக்கும். ஏன்னென்றால், எனக்கு இரண்டு நாட்டுத் தலைவர்களையுமே நன்றாகத் தெரியும்.

நான் முன்பு முடிவுக்குக் கொண்டுவந்த மற்ற போர்களில் இருந்த பல நாட்டுத் தலைவர்களை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.

நான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளுக்கு இடையே வரவிருந்த போர்களைத் தடுத்து நிறுத்தினேன். அது உண்மையிலேயே அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடிய ஒரு மோசமான சூழல்.

பாகிஸ்தான் பிரதமரே கூறியது போல, ஒருவேளை அந்தப் போர் நடந்திருந்தால் கிட்டத்தட்ட 40 மில்லியன் அல்லது 50 மில்லியன் (4 முதல் 5 கோடி) மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.

ஆனால், இந்த உக்ரைன் போரைப் பொறுத்தவரை, மக்கள் நினைப்பதை விட நாம் தீர்வுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

அதிபர் புதின் இதை முடிக்க விரும்புகிறார் என்பதை நான் மிகவும் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது.

இப்போது அதிபர் ஜெலென்ஸ்கியும் கூட இதை முடிக்கத்தான் விரும்புகிறார். நாம் அடுத்து நேட்டோ மாநாட்டிற்குச் செல்லவிருக்கிறோம். அங்கு இதைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நம்புகிறேன்".

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இர... மேலும் பார்க்க

`ஆங்கிலம் தான் அறிவா? ஏன் இதுவரை Last Bench ஸ்டூடென்ட் முன்னேறியதே இல்லையா அமைச்சர் கீர்த்தனா?'

"இவங்க கிட்ட சிம்பிளா, 'What is your Father?'ங்கற தான் கேட்டோம். ஆனா, அதுக்குமே அவங்களால பதில் சொல்ல முடியல...'(ஃபர்ஸ்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்த மாணவியிடம் 'What is your name?', 'What is your F... மேலும் பார்க்க

ஏவுகணையும் தேர்தல் உதவியும்! இந்தோனேசியாவுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா - மோடி பயணத்தின் பின்னணி?

தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தோனேசியாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள பயணம், இருதரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை எழுதும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார... மேலும் பார்க்க

திமுகவில் இணைய ரூ.50 கோடி பேரமா? தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சரவணன், தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். த.வெ.க பெண் உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. த... மேலும் பார்க்க

அதிமுக MLAக்கள் ‘குதிரைப் பேரம்’ சர்ச்சை: அரசிடம் விளக்கம் கேட்க தயாராகும் ஆளுநர்? | Exclusive

தமிழக அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலகல் மற்றும் ‘குதிரைப் பேரம்’ குற்றச்சாட்டு விவகாரம், தற்போது ஆளுநர் மாளிகையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்ப... மேலும் பார்க்க