செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்; செய்தியாளரின் செல்போனைப் பறித்து தாக்க முயற்சி

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளரை ம.தி.மு.க-வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு.

ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வேல்முருகன் அழைப்பின் பேரில் நிருபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரித்தனர். கூட்டத்தில் சாத்தூர் ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராமன் பேசுகையில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக சில கருத்துக்களைப் பேசினார்.

செய்தியாளர்களிடம் வாக்குவாதம்
செய்தியாளர்களிடம் வாக்குவாதம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்டச் செயலாளர் தரப்பினர் ரகுராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரகுராமன் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆதரவாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோசமான வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வீடியோ எடுத்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபரை நோக்கி வந்த ம.தி.மு.க-வினர் அவரது செல்போனைப் பறித்து அவரைத் தாக்க முயன்றனர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இதனால் மண்டபத்தில் இருந்து தாக்கப்பட்ட நிருபருடன் இருந்த மற்ற நிருபர்கள் வெளியே அழைத்து வந்தனர். அதன் பின்பும் வெளியே வந்த ம.தி.மு.க-வினர் நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வைகோ தலைமையில் சாத்தூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ம.தி.மு.க நிகழ்வுகளில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது ஒரு தொடர்கதையாக உள்ளது.

`ரௌடி தட்டாஞ்சாவடி செந்தில், வீட்டுக்கு வந்தவரை கொலை செய்து வீசியவர்!’ - பாஜக எம்.எல்.ஏ பகீர் புகார்

புதுச்சேரியின் பிரபல தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான தட்டாஞ்சாவடி செந்தில், முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர். இவர் காலாப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மீது கொல... மேலும் பார்க்க

Kerala: "Complete Non-Veg" வைரலான பதாகை; இணையத்தில் எதிர்வினைகள் என்ன?

கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தின் அறிவிப்புப் பலகை தற்போது இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அதில் வழக்கத்துக்கு மாறாக "நாங்கள் முற்றிலும் அசைவ உணவகம்" என எழுதப்பட்டிருந்தது. @RishiJo... மேலும் பார்க்க