செய்திகள் :

'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்

post image

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அசைவ உணவுகளுக்கு தடை விதித்து விடுவார்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார். பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் மீன் மற்றும் இறைச்சிக்கு விழாக்காலங்களில் தடை விதிக்கப்பட்டு இருப்பதையும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால் பா.ஜ.கவினர் இதனை மறுத்து வருகின்றனர்.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான காளி கோயிலுக்கு சென்று வழிபட்டார். இந்த கோயில் ராமகிருஷ்ண பரமஹம்சரோடு தொடர்புடையது ஆகும். அம்மா சித்தேஷ்வரி என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் அம்மனுக்கு பிரசாதமாக அசைவ உணவு படைக்கப்படுவது வழக்கம். ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த அம்மனுக்கு முதன் முதலில் அசைவ உணவு படைத்து வழிபட்டார். அதனை தொடர்ந்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது பக்தர்கள் அதே அம்மனுக்கு அசைவ உணவு படையல் படைத்து ராமகிருஷ்ண பரமஹம்சர் குணமடையும்படி வேண்டிக்கொண்டனர்.

1703ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் மேற்கு வங்க மக்களின் மிகவும் நம்பிக்கைக்குறிய தெய்வம் ஆகும். இந்த கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அம்மனுக்கு நடந்த ஆர்த்தியில் கலந்து கொண்டார். அதோடு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கமாட்டோம் என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மாநில பா.ஜ.க தலைவர் சமிக் பட்டாச்சாரியா, மத்திய அமைச்சர் சுகந்தா ஆகியோர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

அதோடு நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் என்பவர் தான் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு, நானும் பா.ஜ.ககாரன் தான் என்றும், அசைவ உணவு எனது பழக்கம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட பிரச்சாரத்தின் கடைசி நாளன்று அன்று அனுராக் தாக்கூர் மற்ற பாஜக தலைவர்களுடன் மீன் குழம்புடன் சாப்பிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜியின் கூற்றை முறியடிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது. மேற்கு வங்க மக்களின் பிரதான உணவு மீனாக இருந்து வருகிறது. எனவேதான் தேர்தல் பிரசாரத்தில் மீன் முக்கிய பங்கு வகித்தது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிரசாரம் இன்று மாலையோடு முடிவுக்கு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, “மீன், இறைச்சி, முட்டை சாப்பிட முடியாது என்று பாஜக சொல்வார்கள்; அவர்கள் எந்த மதத்தையும் நம்ப மாட்டார்கள், அவர்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள்''என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல், அகிலேஷ் கொடும்பாவி எரிப்பு; சட்டென பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்வுக்கு ஏற... மேலும் பார்க்க

ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?!

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிவசேனா இரண்டாக உடைந்துள்ளது. இப்போது துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ... மேலும் பார்க்க

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமா... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் Claude Mythos: சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய நிர்மலா சீதாராமன் ஆலோசனை

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு மனிதர்கள் செய்யவேண்டிய வேலையின் அளவு... மேலும் பார்க்க

தயாராகும் 11,000 வீடுகள்: மும்பை தாராவி கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு 754 சதுர அடி வீடு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த... மேலும் பார்க்க

"தான் உயிரியல் தந்தை இல்லை என்றால் குழந்தைக்கு பராமரிப்புத் தொகை கொடுக்கவேண்டாம்" - சுப்ரீம் கோர்ட்

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் போது ஆண்கள் தங்களது மாஜி மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி ஆ... மேலும் பார்க்க