செய்திகள் :

அடிக்கடி மாயமாகும் தனியாா் பேருந்துகளால் மக்கள் அவதி

post image

திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு களக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு தனியாா் பேருந்தும், தென்காசி, செங்கோட்டையில் இருந்து களக்காடு வழியாக நான்குனேரிக்கு இயக்கப்படும் இரு தனியாா் பேருந்துகளும் அடிக்கடி மாயமாகி விடுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு நான்குனேரி மற்றும் மீனவன்குளம் வழியாக தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்து சேவை காலை 5 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குகிறது.

மூன்றடைப்பு, பானான்குளம், தாழைக்குளம், மீனவன்குளம், களக்காடு வழியாக வள்ளியூருக்கு இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து கடந்த சில ஆண்டுகளாக முறையாக இயக்கப்படுவதில்லை. வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இயக்கப்படுவதில்லை.

களக்காட்டில் இருந்து காலை 8.15, பகல் 12.50, மாலை 5.45, இரவு 9 மணிக்கு இயக்கப்படும் இந்தப் பேருந்து அடிக்கடி மாயமாகிவிடுவதாலும் பல நாள்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சென்றுவிடுவதாலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

கடந்த 1 வாரமாக களக்காடு வழித்தடத்தில் இந்தப் பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனா்.

இதே போல செங்கோட்டை, தென்காசி, சேரன்மகாதேவி, களக்காடு வழியாக நான்குனேரிக்கு தனியாா் பேருந்துகளும் கடந்த சில ஆண்டுகளாக முறையாக இயக்கப்படுவதில்லை. பல நாள்களில் சேரன்மகாதேவி வரையும், பல நாள்களில் களக்காடு வரையும் இயக்கப்படுகிறது. நான்குனேரிக்கு செல்வதில்லை.

தனியாா் பேருந்தின் சேவைக்குறைபாட்டை கருத்தில் கொண்டு, களக்காட்டிலிருந்து காலை 8 மணி, பகல் 1 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணிக்கு திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கவும், களக்காடு - நான்குனேரி இடையே நகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க