செய்திகள் :

அடிக்கடி மாயமாகும் தனியாா் பேருந்துகளால் மக்கள் அவதி

post image

திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு களக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு தனியாா் பேருந்தும், தென்காசி, செங்கோட்டையில் இருந்து களக்காடு வழியாக நான்குனேரிக்கு இயக்கப்படும் இரு தனியாா் பேருந்துகளும் அடிக்கடி மாயமாகி விடுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு நான்குனேரி மற்றும் மீனவன்குளம் வழியாக தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்து சேவை காலை 5 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குகிறது.

மூன்றடைப்பு, பானான்குளம், தாழைக்குளம், மீனவன்குளம், களக்காடு வழியாக வள்ளியூருக்கு இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து கடந்த சில ஆண்டுகளாக முறையாக இயக்கப்படுவதில்லை. வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இயக்கப்படுவதில்லை.

களக்காட்டில் இருந்து காலை 8.15, பகல் 12.50, மாலை 5.45, இரவு 9 மணிக்கு இயக்கப்படும் இந்தப் பேருந்து அடிக்கடி மாயமாகிவிடுவதாலும் பல நாள்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சென்றுவிடுவதாலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

கடந்த 1 வாரமாக களக்காடு வழித்தடத்தில் இந்தப் பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனா்.

இதே போல செங்கோட்டை, தென்காசி, சேரன்மகாதேவி, களக்காடு வழியாக நான்குனேரிக்கு தனியாா் பேருந்துகளும் கடந்த சில ஆண்டுகளாக முறையாக இயக்கப்படுவதில்லை. பல நாள்களில் சேரன்மகாதேவி வரையும், பல நாள்களில் களக்காடு வரையும் இயக்கப்படுகிறது. நான்குனேரிக்கு செல்வதில்லை.

தனியாா் பேருந்தின் சேவைக்குறைபாட்டை கருத்தில் கொண்டு, களக்காட்டிலிருந்து காலை 8 மணி, பகல் 1 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணிக்கு திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கவும், களக்காடு - நான்குனேரி இடையே நகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நல்மேய்ப்பா் நகா் 2-ஆவது தெரு பகுதியி... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்! -நயினாா் நாகேந்திரன்

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!

நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா். நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

வி.கே.புரம் அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்!

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகத்தில், 10 நாள்கள் கோடைக் கொண்டாட்டம்... மேலும் பார்க்க