செய்திகள் :

தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!

post image

தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி.  இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்திரப் பதிவேட்டின் பிரபல ரெளடியான இவரை சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கடந்த சில நாள்களாக தனிப்படை போலீஸார் அவரை தேடி வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மரிய அந்தோணி

இந்த நிலையில், குரும்பூர் அருகேயுள்ள சோனகன்விளை- காணியாளன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான போலீஸார், ரெளடி  மரிய அந்தோணியை கைதுசெய்ய முயன்றனர். அப்போது, அவர் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தனது துப்பாக்கியால் மரிய அந்தோணியை எச்சரித்தும் கேட்காததால் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். இதில், மரிய அந்தோணியின் வலது மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையில் குண்டு பாய்ந்தது.  காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் ரெளடி அந்தோணி  ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, முதற்கட்டமாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ.- ராஜபிரபு

பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாஜி காதலியிடம் மன்னிப்புக் கேட்க சென்றபோது அடி, உதை; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த காதலன் பலி

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் ஹிதேஷ் ரானா. இவரது மனைவி சஞ்சல் ரானா. இதில் சஞ்சல் ரானா திருமணத்திற்கு முன்பு ரஞ்சித் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த வால... மேலும் பார்க்க

கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக்கிய நல்லிரவு கொலை

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது. மாநில முதல்வர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தவெக ஆதரவாளர் பாம்பு தினேஷ் கைது!

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியுடன் அன்பாக பேசி பழகி வந... மேலும் பார்க்க

நெல்லை: கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு; தற்கொலை செய்த அக்கா... அக்காள் கணவரை கொலைசெய்த தம்பி!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி ராஜலெட்சுமி. தம்பதியினர் நெல்லையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜலெட்சுமி, தனியார் ... மேலும் பார்க்க

9 ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்; மகாராஷ்டிராவை உலுக்கிய 'கல்யாண மாஃபியா'!

மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நக... மேலும் பார்க்க

டெல்லி: மணிக்கணக்கில் மனைவியுடன் சண்டை; இளம் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை; என்ன நடந்தது?

டெல்லி தெற்கு பகுதியில் உள்ள கிரீன் பார்க் வீட்டில் அமன்குமார் சர்மா(30) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் வடகிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்தூமா கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சர்... மேலும் பார்க்க