செய்திகள் :

`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்

post image

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆரம்பத்தில் 5 வாரங்கள் வரை போர் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.

போர் எப்போது முடியும் என்பது குறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஈரானை முடிக்க வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. இது தவிர ஈரானை வழிநடத்துவதற்கு பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்" என்று கூறினார்.

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க ரேடார்

ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவது குறித்தும் அமெரிக்கா பயப்படுகிறதா என நிருபர்கள் கேட்டதற்கு, "அவர்கள் எப்போதும் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் அதைப் பற்றி சிந்திக்கிறோம். நாங்கள் அதற்காகத் திட்டமிடுகிறோம். ஆனால் நாங்கள் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நான் சொன்னது போல், சிலர் இறந்துவிடுவார்கள். போருக்குச் செல்லும்போது, ​​சிலர் இறக்கத்தான் செய்வார்கள். தாக்குதல்களுக்கு மத்தியில் டெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அமெரிக்காவை அணுகுகிறது.

ஆனால் அவர்கள் கோரிக்கை தாமதமாக வந்தது. அமெரிக்கா இப்போது அவர்கள் செய்வதை விட அதிகமாக போராட விரும்புகிறது. அமெரிக்க ராணுவம், இஸ்ரேல் படையுடன் இணைந்து ஈரானின் ஏவுகனை மற்றும் ட்ரோன்களை அழிக்க எந்நேரமும் பணியாற்றி வருகிறது. முதலில் ஈரானை முடிக்க விரும்புகிறோம். அதனை முடித்துவிட்டு கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக" அவர் தெரிவித்தார்.

கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணமாக அந்நாட்டிற்குள் எரிபொருள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அமெரிக்கா வழங்கிய ஏவுகணை பாதுகாப்பு நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ரேடார்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இது பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சம... மேலும் பார்க்க

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வ... மேலும் பார்க்க

"இந்தியா எங்களது சந்தையை 'இப்படி' பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை" - அமெரிக்கா

இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது..."20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த... மேலும் பார்க்க

`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்

இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்ய... மேலும் பார்க்க

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யே... மேலும் பார்க்க