செய்திகள் :

அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம்; சர்ச்சையில் சிக்கிய சூலூர் தவெக MLA சொல்வது என்ன?

post image

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார். இவரது வீடு கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளலூர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை நேற்று காலை, தனது வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.

இதில் பங்கேற்க சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள செஞ்செரி புத்தூர், ஜெ.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகாரிகள், அவரது வீட்டிற்குச் சென்று ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது ஜோதிட அலுவலகத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதால் ஏற்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், சுகுமாரும் அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக, எதிர்க்கட்சியினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சுகுமார் எம்.எல்.ஏ
சுகுமார் எம்.எல்.ஏ

இது குறித்து சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாரிடம் கேட்டபோது, “எம்.எல்.ஏ. அலுவலகம் இன்னும் தயாராகவில்லை. சுல்தான்பேட்டை ஒன்றியத்திலிருந்து ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. ஊராட்சி செயலாளர்கள் வேலையே செய்வதில்லை என்கிறார்கள்.

இது குறித்து ஒவ்வொருவராக அழைத்து பேச முடியவில்லை. நானே வந்து அவர்களைப் பார்ப்பதாகக் கூறினேன். அவர்கள் நாங்களே உங்களை வந்து பார்க்கிறோம் என்றார்கள். ஒரு 15 நிமிடம் பேசி முடித்து அனுப்பிவிட்டேன். இது ஒரு குற்றமா?

ஊருக்குள் சென்று குடிநீர், சாலை, பாதாள சாக்க்டை போன்ற மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து சரி செய்யுமாறு கூறினேன். வேறு எதுவும் சொல்லவில்லை. நன்றாக வேலை செய்பவர்களுக்கு விருது வாங்கி தருவதாகக் கூறினேன். கெட்டது செய்பவனை நம்பி அவனுடன் செல்கிறார்கள், எல்லாம் பண்ணி தருகிறார்கள். நாம நல்லது சொன்னால், இதுபோல எதாவது போட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறார்கள்.

நல்லது செய்தால் இடைஞ்சல் வரத்தான் செய்யும். தி.மு.க. ஆட்சியின் போது இந்த அதிகாரிகள் அமைச்சர்களைப் பார்க்க நாள்கணக்கில் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் நான் வேலைதான் செய்ய சொல்கிறேன். நானும் அவர்களோடு சேர்ந்து எனக்கும் காசு வாங்கி கொடுங்கள் எனச் சொல்லியிருந்தால், இதுபோல எதுவும் வெளியே வந்திருக்காது” என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க