செய்திகள் :

புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டுகள் சிறை தண்டனை! - நீதிமன்றத் தீர்ப்பும், பின்னணியும்

post image

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரௌடி பாம் எழில் (எ) எழிலரசன் மீது கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெயின்ட்டர் தொழில் செய்பவரான இவர், கடந்த 2023-ம் ஆண்டு வேலைக்குச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமியிடம் அறிமுகமாகியிருக்கிறார்.

அதையடுத்து கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறி சிறுமியைக் கடத்திச் சென்ற எழிலரசன், அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதையடுத்து அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, நடந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக சிறுமியின் பெற்றோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரௌடி எழிலரசனைக் கைதுசெய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

குற்றவாளி ரௌடி எழிலரசன்

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரான பச்சையப்பன் வாதாடிய இந்த வழக்கில், அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எழிலரசன் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி சுமதி, அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கினார்.

அத்துடன் சிறுமி கடத்தல் பிரிவில் பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்த அவர், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tvisha Sharma: கணவரின் வாக்குமூலமும் வாட்ஸ்அப் ஆதாரங்களும் - நடிகை ட்விஷா வழக்கில் தொடரும் மர்மங்கள்

மாடல் மற்றும் நடிகை ட்விஷா சர்மாவின் மரண வழக்கு, தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இந்த வழக்கை கையில் எடுத்து, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் நிகழ்ந்த மரணம்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை: ”உங்க மகளின் ஞாபகம் வரலயா?" - நீதிபதியிடம் குற்றவாளி கண்ணீர்

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றார். இரவு வரை ... மேலும் பார்க்க

அட்டப்பாடி மது கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை; கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞர் மது(30) 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பல் தாக்கியதில் மரணமடைந்தார். பசிக்கு கடைகளில் இருந்து உணவுபொருட்கள்... மேலும் பார்க்க

`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ - மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான வழுதாவூரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், அந்த ஊர் கோயிலுக்கு அருகில் கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் கண்டமங்கலம் போலீ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : தோட்டத்திற்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; உடற்கல்வி ஆசிரியர் கைது!

தோட்டத்திற்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்கொடுமைசமீபகாலமாக தமிழகத்தின் பல பகுதிகள... மேலும் பார்க்க

விழுப்புரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; 62 வயது முதியவர் சிக்கிய பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டி இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 62 வயதாகும் இவர் மர வேலைகளைச் செய்து வருகிறார். நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வ... மேலும் பார்க்க