செய்திகள் :

"முதல்வர் விஜய்க்கு திரைத்துறையினர் அழுத்தம் கொடுக்கக் கூடாது" - இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

post image

வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், "முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட மஞ்சுவிரட்டு
வட மஞ்சுவிரட்டு

திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது, நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா திரைத்துறைகள் மேம்பட்டு இருக்கின்றன. அங்குள்ள நடிகர்கள் முதலில் கதையைத் தேர்வு செய்வார்கள், பிறகு அதற்குண்டான பட்ஜெட்டைக் கேட்பார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகாக வரக் கூடிய லாபத்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொள்வார்கள். நம்முடைய நடிகர்கள் அப்படி இருப்பதில்லை.

ஏனெனில் திரைப்படம் எடுக்கின்ற எனக்கும், பேரரசுக்கும் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. எழுத்தாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள் தங்களுடைய கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைப்பார்கள்.

திரைத்துறையினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து, முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. அதனால்தான் இயக்குநர் சங்கத்தில் இருந்து நாங்கள் அவரைச் சந்திக்கும் போது எந்தவிதமான கோரிக்கையும் முன் வைக்கவில்லை.

இயக்க்குநர் ஆர்.வி உதயகுமார்
ஆர்.வி உதயகுமார்

அவருக்கு எது நல்லது, கெட்டது என்பது தெரியும். அவரே நிச்சயம் செய்வார் என நாங்கள் நம்புகிறோம். திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், திரையரங்குகளில் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்.

மும்பை போன்ற பெரிய நகரங்களில் கூட 70, 80 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது. இந்த நிலை தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளுக்கும் வர வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று பேசியிருக்கிறார்.

"'இளையராஜா அனாதை ஆகிவிட்டாரு'ன்னு ஏன் எழுதணும்?" - கங்கை அமரன் காட்டம்

திரைக்கலைஞர் கங்கை அமரன் எழுதியுள்ள 'உயிரிணையே' ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், "பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். ... மேலும் பார்க்க

"மொத 'நம்ம சேர்ந்து டைரக்ட் பண்ணுவோம்'னுதான் RJ Balaji சொன்னார்" - 'கருப்பு' ரைட்டர் சரவணன் பேட்டி

'கருப்பு' படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள். படம் வெளியாகி இரண்டாவது வாரத்திலும் 'ஹவுஸ்ஃபுல்'-ஆகக் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. 'கருப்பு' திரைப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த ... மேலும் பார்க்க

`புது படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி!' - திரைத்துறைக்கு முதல்வர் கொடுத்த `ட்ரீட்'

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கடந்த மே 16-ம் தேதி முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். உள்ளாட்சி வரி ரத்து, திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகளுக்கு... மேலும் பார்க்க

Karuppu : 'நான் சங்கியா?' - விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.மே 15 ஆம் தேதி வெளியான... மேலும் பார்க்க

ஆனந்தம் 25: 'கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!' - நெகிழும் லிங்குசாமி

இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான 'ஆனந்தம்' படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று 'ஆனந்தம்' வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ர... மேலும் பார்க்க