செய்திகள் :

`புது படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி!' - திரைத்துறைக்கு முதல்வர் கொடுத்த `ட்ரீட்'

post image

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கடந்த மே 16-ம் தேதி முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.

உள்ளாட்சி வரி ரத்து, திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகளுக்கு அனுமதி, சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் முதல்வர் விஜய், புதிய திரைப்படம் வெளியான நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஐந்து காட்சிகள் வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால், விடுமுறை தினங்களில் திரையரங்குகளுக்கு எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த உத்தரவு குறித்து வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர்.

சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திரையரங்கி 5 காட்சிகள் பற்றிய செய்திக்குறிப்பு
திரையரங்கி 5 காட்சிகள் பற்றிய செய்திக்குறிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Karuppu : 'நான் சங்கியா?' - விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.மே 15 ஆம் தேதி வெளியான... மேலும் பார்க்க

ஆனந்தம் 25: 'கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!' - நெகிழும் லிங்குசாமி

இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான 'ஆனந்தம்' படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று 'ஆனந்தம்' வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ர... மேலும் பார்க்க

Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' - நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா - வெ... மேலும் பார்க்க

'கருப்பு' படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் ஏகோபித்த வரவேற்புக் கிடைத்திருக்கிறது. 200 கோடியைத் தாண்டித் திரைப்படம் வசூல் செய்துகொண்டிருப்பதாகப் படக்... மேலும் பார்க்க

Karuppu: "என்னை மிரட்டி என் நகையை திருடிய கதையைதான் 'கருப்பு' படத்தில்..." - ஆர்.ஜே. பாலாஜி

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திர... மேலும் பார்க்க

Karuppu: "இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில நான் தியேட்டர்ல பார்க்கல" - சூர்யா எமோஷனல்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.மே 15 ஆம் தேதி தான் வெ... மேலும் பார்க்க