செய்திகள் :

Abraham Accord: ஈரான் போர்; மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் வைக்கும் செக்; 'நோ' சொன்ன பாக்., சவூதி பதில்?

post image

"ஈரானுடன் ஒன்று அனைத்து தரப்பிற்கும் ஏற்ற சிறந்த ஒப்பந்தம் ஏற்படும்... இல்லையென்றால் ஒப்பந்தமே ஏற்படாது.

ஒருவேளை, ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும்.

ஆனால், உண்மையில் அதை யாரும் விரும்பவில்லை" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு 'ஹேப்பி நியூஸை' தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட, அதே பதிவில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார்...

ட்ரம்ப்
ட்ரம்ப்

"சவூதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' கையெழுத்திட வேண்டும்.

இந்த உடன்படிக்கையில் இணைய ஒன்றிரண்டு நாடுகளுக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். அது ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால், மற்ற நாடுகள் இந்த உடன்படிக்கைக்குத் தயாராக இருக்க வேண்டும். இதில் ஈரானும் ஒரு பகுதியாக அமையும்" என்று தான் பட்டியலிட்ட நாடுகளுக்கு செக் வைத்துள்ளார் ட்ரம்ப்.

'சரி... இந்த நாடுகள் ஏன் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும்?' என்கிற கேள்வி நிச்சயம் எழும். அதற்கு அவரே பதில் தருகிறார்...

"ஆபிரகாம் உடன்படிக்கையானது இதில் ஏற்கனவே இணைந்துள்ள நாடுகளுக்கு (ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ, சூடான் மற்றும் கஜகஸ்தான்) இந்த இக்கட்டான போர் மற்றும் மோதல் காலத்திலும் கூட நிதி, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக ஒரு மிகப்பெரிய வளர்ச்சியைத் தந்துள்ளது.

இதில் உள்ள தற்போதைய உறுப்பினர்கள் யாரும் இதிலிருந்து விலகவோ அல்லது ஒரு சிறிய இடைவெளி எடுக்கவோ கூட நினைத்தது இல்லை.

ஆபிரகாம் உடன்படிக்கை | 2020
ஆபிரகாம் உடன்படிக்கை | 2020

அதற்கு ஒரே காரணம், இந்த ஆபிரகாம் உடன்படிக்கை அவர்களுக்கு அவ்வளவு நன்மைகளைச் செய்துள்ளது. இது இன்னும் எல்லாருக்குமே மிகச்சிறந்த ஒன்றாக அமையும்.

5,000 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு உண்மையான அதிகாரம், பலம் மற்றும் அமைதியைக் கொண்டு வரும். உலகிலேயே இதுவரை கையெழுத்தான எந்தவொரு ஆவணத்தையும் விட, இது மிக உயரிய மரியாதையைப் பெறும். இதன் முக்கியத்துவமும் அந்தஸ்தும் ஈடு இணையற்றதாக இருக்கும்!" என்று தெரிவித்திருக்கிறார்.

"இந்த உடன்படிக்கையில் முதலில் சவூதி அரேபியாவும், கத்தாரும் கையெழுத்திட வேண்டும். அவர்களுக்குப் பின் பிறர் கையெழுத்திட வேண்டும்" என்று வரிசையையும் ட்ரம்பே அறிவித்துவிட்டார்.

இப்படி ட்ரம்ப் வலியுறுத்தும் 'ஆபிரகாம் உடன்படிக்கை' பற்றி...

2020-ம் ஆண்டு, ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது தான், 'ஆபிரகாம் உடன்படிக்கை'.

இந்த உடன்படிக்கையை முன்னெடுத்தது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

2020-ம் ஆண்டிற்கு முன்பு, பல மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தான் செயல்பட்டு வந்தார்கள்.

மத்திய கிழக்கு நாடுகள்
மத்திய கிழக்கு நாடுகள்

2020-ம் ஆண்டு ட்ரம்ப் கொண்டு வந்த ஆபிரகாம் உடன்படிக்கையில் இஸ்ரேல், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை கையெழுத்திட்டன. அதன் பின், மூன்று நாடுகளுக்குள் நட்பு, சுற்றுலா முதல் வணிகம் வரை அனைத்து உறவுகளும் சுமுகமானது.

நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதே ஆபிரகாம் உடன்படிக்கையின் நோக்கம்.

இந்த உடன்படிக்கைக்குப் பின், இந்த நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நாடுகளில் நிறுவப்பட்டன. பரஸ்பரமாக விமானப் பாதைகள் நிறுவப்பட்டன.

இப்படி பல பல முன்னேற்றங்கள் நடந்தன.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மட்டுமல்ல... பின்னர், மொரோக்கோ, சூடான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் இணைந்தன.

இதில் பிற மத்திய கிழக்கு நாடுகளும் இணைய வேண்டும் என்று கருதுகிறார் ட்ரம்ப்.

போர் நிறுத்தத்திற்கு ஈரானின் மிக முக்கிய நிபந்தனை - ஈரான், லெபனான் மீதான பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

ஆபிரகாம் உடன்படிக்கையில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளும் கையெழுத்திட்டு விட்டால், ஈரான் மீது அந்த நாடுகள் தாக்குதல்களைத் தொடுக்காது.

இதில் ட்ரம்ப் எப்படியோ ஈரானின் நிபந்தனையை செட்டில் செய்துவிடுவார்.

பாலஸ்தீனம்
பாலஸ்தீனம்

இன்னொரு பக்கம், சவூதி அரேபியாவை ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைக்க அமெரிக்கா முன்பிருந்தே முனைப்பாக உள்ளது. ஆனால், பாலஸ்தீனத்திற்கு சவுதி அரேபியாவின் ஆதரவு உள்ளதால், அது இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை.

ஒருவேளை, இப்போது ஆபிரகாம் உடன்படிக்கையில் சவூதி அரேபியா இணைந்துவிட்டால், அவர்களது நீண்ட கால முயற்சி கைக்கூடிவிடும்.

ட்ரம்ப் பட்டியலிட்டிருக்கும் எந்த நாடும் இதுவரை எதுவும் கூறாத நிலையில், பாகிஸ்தான் மட்டும் ட்ரம்பின் அறிவிப்பை ஓபனாக மறுத்துவிட்டது. இதற்கும் பாலஸ்தீன ஆதரவு தான் மிக முக்கிய காரணம்.

மத்திய கிழக்கு நாடுகள் பல பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே உள்ளது. பாலஸ்தீனத்திற்கு 'நாடு' என்கிற அந்தஸ்து வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், இவர்கள் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைந்தால், அவர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருக்கும் பாலஸ்தீன நாட்டுரிமை கிடைக்காமல் போகலாம்.

ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டு, இஸ்ரேலை நாடாக அங்கீகரித்தப் பின், பாலஸ்தீனத்திற்கு நாட்டுரிமை என்று கேட்க முடியாது.

அதனால், மத்திய கிழக்கு நாடுகள் இதற்கு 'ஓகே' சொல்லுமா என்பது பெரிய கேள்விக்குறி. பொறுத்திருந்து பார்ப்போம்!

CBSE: `நடப்பாண்டிலிருந்தே மூன்றாவது மொழி கட்டாயம் என்பது பெரும் அதிர்ச்சி' - அண்ணாமலை எதிர்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப் பாடக் கொள்கையில் திடீர் மாற்றம் செய்திருப்பதற்கு, தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்... மேலும் பார்க்க

‘முதலமைச்சர் விஜய்யை தற்போது விமர்சிப்பது சரியாக இருக்காது’ – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெட்ரோல் விலை உயர்வு எல்லா இடத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரியும். முடிந்த அளவிற்கு... மேலும் பார்க்க

ராஜினாமா செய்யும் அதிமுக MLA-க்களை தவெக-வில் சேர்க்க எதிர்ப்பு; காங்கிரஸ் பெண் நிர்வாகி பதவி விலகலா?

கோவையைச் சேர்ந்த ஸ்ரீ நிதி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தேசிய செயலாளராக உள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த நிலையில் அ... மேலும் பார்க்க

ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய விசிக; மல்லுக்கட்டிய திமுக! - குன்னத்தில் நடந்தது என்ன?

தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க ஆட்சியமைக்க உதவியதோடு, த.வெ.க அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். இது, தி.மு.க-வினரை கடுமையாக விமரசிக்க வைத்தது. பலரும்... மேலும் பார்க்க

வேலூர்: `மாமூல் கேட்டு மிரட்டியது உண்மைதான்’ - தவெக ஒன்றியச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் உரிமையாளர்கள் சிலரை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாள... மேலும் பார்க்க

``விஜய் பதவியேற்பு விழாவில் அந்த 3 பேர் மிஸ்ஸிங்"- சமுத்திரக்கனி யாரை சொல்கிறார்?

தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில்... மேலும் பார்க்க