செய்திகள் :

கிருஷ்ணகிரி : தோட்டத்திற்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; உடற்கல்வி ஆசிரியர் கைது!

post image

தோட்டத்திற்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சமீபகாலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் வக்கிரம் பிடித்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயதடைய பெண், மாடுகளை கட்டுவதற்காக தன் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மது போதையில் வந்த ஓசூர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவர், அபெண்ணின் முன் தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், அங்கிருந்து செல்ல முயன்றபோது அவர் கையை பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் பதறிய அப்பெண் தன்னை காப்பாற்றும்படி கதறியுள்ளார்.

கைது
கைது

அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு உடற்கல்வி ஆசிரியர் குழந்தை இயேசுவை தாக்கியுள்ளனர். பின்பு அஞ்செட்டி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து அங்கு வந்த காவல்துறையினரிடம் ஆசிரியரை ஒப்படைத்தனர்.

பின்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் குழந்தை இயேசுவை காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; 62 வயது முதியவர் சிக்கிய பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டி இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 62 வயதாகும் இவர் மர வேலைகளைச் செய்து வருகிறார். நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை; ஒரு மாதம் காத்திருந்து வெட்டி கொன்ற கும்பல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்ற... மேலும் பார்க்க

பழனி: புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச மெசெஜ்; எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப்பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவரிடம் சில நாள்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்னை குறித்துப் புகார் அளிப்பதற்காக காவல் நிலை... மேலும் பார்க்க

வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் - திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் - சபியா தம்பதியரின் மகள் பாத்திமத் சுபைதா(24). பாத்திமத் சுபைதாவும் செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதில்(27) என்பவரை காதலித்து பெற்றோர் ... மேலும் பார்க்க

"என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க" – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார்

கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆக... மேலும் பார்க்க

'வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?' - தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவன் வாக்குவாதமா?

போபாலைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற பெண் கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். புனே முன்னாள் அழகியான த்விஷா ஒரு எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் தனது கணவனுடன் சமூக வலைத்தளம் மூலம் ம... மேலும் பார்க்க