செய்திகள் :

வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் - திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்

post image

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் - சபியா தம்பதியரின் மகள் பாத்திமத் சுபைதா(24). பாத்திமத் சுபைதாவும் செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதில்(27) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு இரண்டு மாதமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆதிலுக்கும் அவரது மனைவி பாத்திமத் சுபைதாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சுபைதாவின் தங்க நகைகளைக் கேட்டு கணவர் வீட்டார் அவரைத் தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் விதமாக தனது தாய் மற்றும் சகோதரனை வீட்டுக்கு அழைத்துள்ளார் பாத்திமத் சுபைதா. ​கடந்த சனிக்கிழமை இரவு சுபைதாவின் தாய், சகோதரர் எம்.கே. அப்துல் வாசில் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆதிலின் வீட்டிற்கு சென்றனர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாமல் இருந்தால் சுபைதாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

கணவர் வீட்டில் வைத்து இருதரப்பினரும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தைக்கு இடையே ஆதில் திடீரென தனது மனைவி சுபைதாவிடம் வாக்குவாதம் செய்ததுடன் அவரது மொபைல் போனைப் பிடுங்கி வீசி எறிந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுபைதா, வீட்டில் தரை கழுவவும், துருவை நீக்கவும் வைக்கப்பட்டிருந்த ஆசிடை எடுத்து திடீரென குடித்தார். பதறிப்போன உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுபைதா பரிதாபமாக உயிரிழந்தார். ​வரதட்சணை கேட்டு கணவனும் அவரது குடும்பத்தினரும் சுபைதாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அவரது சகோதரர் எம்.கே. அப்துல் வாசில் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்குப்பதிவு செய்த வித்யாநகர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

தற்கொலை செய்துகொண்ட பாத்திமத் சுபைதா அவரது கணவர் ஆதிலுடன்

சுபைதாவின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ஆகியோரிடம் இருந்து வாக்குமூலங்களைச் சேகரித்த பின்னரே, கணவர் ஆதிலை போலீசார் கைது செய்தனர். ​ஆதில் மற்றும் பாத்திமத் சுபைதா ஆகியோரின் காதல் திருமணம் நடந்து இன்றுடன் சரியாக ஓராண்டு நிறைவடைகிறது.

முதலாவது திருமண நாள் அன்று இளம் பெண்ணுக்கு இந்த துயரம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியருக்கு இடையே திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாகப் பலமுறை அந்த இளம்பெண் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்ததாகவும் வித்யாநகர் இன்ஸ்பெக்டர் எம்.பி. வினீஷ் குமார் தெரிவித்தார். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

"என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க" – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார்

கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆக... மேலும் பார்க்க

'வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?' - தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவன் வாக்குவாதமா?

போபாலைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற பெண் கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். புனே முன்னாள் அழகியான த்விஷா ஒரு எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் தனது கணவனுடன் சமூக வலைத்தளம் மூலம் ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நி... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு - கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில... மேலும் பார்க்க

'பட்டாவுக்கே ரூ. 5,000 வாங்குறோம்; மணலுக்கு ரூ. 50,000 கொடுங்க!' - பேரம் பேசிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம், 'நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எனக்... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை: தாசில்தார் காருக்கு தீ வைப்பு; நள்ளிரவில் பீதியைக் கிளப்பிய இளைஞன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாசில்தார் அலுவலகத்தின் போர்டிகோ வாயிலில் நிறுத்திவைக்கப்பட்ட தாசில்தார் பயன்படுத்தும் `அரசு வாகனம்’ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவெனப் பரவிய பிறகே... மேலும் பார்க்க