செய்திகள் :

'அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பாஜக விரும்பவில்லையா?' - திருமாவளவன் கேள்வி

post image

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “சிறப்பு தீவிர திருத்தம் மூலம் (SIR) வாக்காளர் பட்டியலில் சீராய்வு செய்வதாக இருந்தால் பிரச்னை இல்லை. இவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருமாவளவன்

சிஏஏ சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்த முடியாததால் இப்படி செய்கிறார்கள். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யக்கூடிய அபாயம் உள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வை தூண்ட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது. செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அவர் கட்சியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவுக்கு உகந்ததல்ல. தவெகவில் இணைய வேண்டும் என்பது செங்கோட்டையனின் முடிவு. அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவை நெருக்கடியை நோக்கி தள்ளியதில் பாஜகவின் பங்கு இருக்கிறது.

செங்கோட்டையன் டெல்லி சென்று வந்து, ‘அமித் ஷா என்னை அழைத்தார்’ என்று கூறியிருந்தார். பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் அதிமுகவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதிமுக -பாஜக கூட்டணி கட்சிகளாக உள்ளன. அப்படியிருக்கும்போது செங்கோட்டையன் வெளியேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்கிற கேள்வி எழுகிறது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையே பாஜகவால் இணக்கம் ஏற்படுத்த முடியவில்லையா. எல்லா பிரச்னைகளிலும் தலையிடும் பாஜக இதில் ஏன் வேடிக்கை பார்க்கிறது. அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு பாஜக ஏன் விரும்பவில்லை. இது பாஜகவின் சித்து விளையாடுகளில் ஒன்று.” என்றார்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க