Whatsapp-ல் நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம்! - இது தெரியாமப் போச்சே?! - 7
அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு
ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி தி.மு.க - அ.தி.மு.க என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது.
இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டன. அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், அ.தி.மு.க-வின் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இறுதிக் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பொற்கொடிக்கு திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆயிரம் விளக்கு - வளர்மதி
அண்ணா நகர் - கோகுல இந்திரா
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஆதிராஜாராம்
திட்டக்குடி - முருகுமாறன்
துறைமுகம் - ராயபுரம் மனோ
விருகம்பாக்கம் - விருகை ரவி
தி.நகர் - சத்தியநாராயணன்
வேளச்சேரி - அசோக்
சோழிங்கநல்லூர் - கேபி கந்தன்
ஆர்.கே.நகர் - ராஜேஷ்
வில்லிவாக்கம் - விஜயகுமார்
திருச்சுழி - ராஜவர்மன்
ஆலந்தூர் - சரவணன்













