செய்திகள் :

அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி; தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரைத் தாக்கிய புதிய தமிழகம் நிர்வாகிகள்

post image

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது.

இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தியதால் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொந்தரவாக இருந்துள்ளதாம்.

police
police

அதனால், நிகழ்ச்சியை நிறுத்துமாறு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூறியுள்ளனராம்.

அப்போது அதனை ஏற்க மறுத்த மாரிக்கண்ணன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கும்  தகவல் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேஷ்வரனை விழா நடைபெறும் இடத்திற்கு வர விடாமல் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் வரவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

”எங்க ஊருக்குள்ள நீ வரக்கூடாது” எனக் கடும் வாக்குவாதம் செய்ததுடன் "ஏ போலே போ..'' என ஒருமையில் பேசி தள்ளி விட்டு அவரைத் தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதை எடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவியாளரைப் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

வெம்பக்கோட்டை காவல் நிலையம்
வெம்பக்கோட்டை காவல் நிலையம்

இந்தச் சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸார் முனீஸ்வரன், அழகுமுத்து ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

இதுதொடர்பாக மேலும் 6 பேரைத் தேடி வருகின்றனர்.  கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை புதிய தமிழகம் கட்சியினர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திரு... மேலும் பார்க்க

சூலூர் சிறுமி பாலியல் கொடுமை வழக்கு: 2வது குற்றவாளியிடம் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்மீது புகார்!

தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி. பெருமாள் மனைவி கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் இன்று புகார்... மேலும் பார்க்க

கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்... மேலும் பார்க்க

கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியி... மேலும் பார்க்க

ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து கணவரைக் கொன்ற மனைவி

கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தீப், கடந்த மார்ச் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லேசான விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பெரிய அளவில் காய... மேலும் பார்க்க

சென்னை: விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில், சரக்கு பார்சல்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படு... மேலும் பார்க்க