செய்திகள் :

அன்பே டயானா: "படத்தின் கடைசி 20 நிமிடம், தமிழ் சினிமாவின் பெஸ்ட்டான..!" இயக்குநர் ராம் பாராட்டு

post image

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அன்பே டயானா படத்தில்...
அன்பே டயானா படத்தில்...

இப்படம் நாளை (ஜூலை.17) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடைபெற்றது.

அந்தவகையில் 'அன்பே டயானா' படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர் ராம், " 'ஜமா' பாரியின் இரண்டாவது படம் 'அன்பே டயானா'.

தமிழில் எனக்கு பிடித்த எழுதி, இயக்கி, நடிக்கும் ஒருவர்களில் பாரி மிகவும் முக்கியமானவர் என்று நினைக்கிறேன். எனக்கு எமோஷனலாக இருந்தது. பாரி ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

'ஜமா' படத்தை மிகவும் சீரியஸாக எடுத்திருந்தார். ஆனால் இந்தப் படத்தில் தொடக்கத்தில் இருந்தே சிரிக்க வைத்திருக்கிறார். கடைசி 20 நிமிடங்கள்... தமிழ் சினிமாவின் பெஸ்ட் கடைசி 20 நிமிடங்களாக இருக்கும்.

சிரிக்கவும், யோசிக்கவும், நெகிழவும் வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அப்பா, மகன் உறவை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் வந்திருக்கும் அப்பா - மகனை நான் பார்த்தது இல்லை.

'அன்பே டயானா' பிரஸ் ஷோ
'அன்பே டயானா' பிரஸ் ஷோ

சேத்தன் சாரின் மிகப்பெரிய ரசிகர் நான். 'விடுதலை', 'ஜமா' படங்களில் நன்றாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அதையும் தாண்டி நடித்திருக்கிறார். 'சேத்தன்' முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் சிரிக்க வைத்தார், நெகிழ வைத்தார்.

மொழி, மதம், சாதி, இனம் தாண்டி மகத்தானது தான் காதல் என்று சொல்லி சிரிக்க, சிந்திக்க வைத்த படம் 'அன்பே டயானா'. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு பிடித்த பாரியின் வணிக ரீதியான வெற்றி இந்தப் படத்தில் இருந்து துவங்கும் என்று நம்புகிறேன்" என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

Arasan: ஸ்லிமான சிலம்பரசன், ஈ.சி.ஆரில் பிரமாண்ட வடசென்னை செட்; மீண்டும் ரெடியாகும் 'அரசன்'- அப்டேட்

வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தக... மேலும் பார்க்க

அன்பே டயானா: "எனது பயணம் 'ஜமா' படத்தில் தொடங்கியது இல்லை, 2013-ல்..!"- பாரி இளவழகன் எமோஷனல்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

இதயம் முரளி: "இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும்னு தோணுச்சு" - 'கனா கானும் காலங்கள்' மோனிஷா ஷேரிங்ஸ்

'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனில் சங்கவியாக நடித்து மக்களுக்கு பேவரிட்டானவர் மோனிஷா ரவிஷங்கர். அத்தொடருக்குப் பிறகு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து முழுமையாகவே விலகி... மேலும் பார்க்க

"சர்க்கார் படப்பிடிப்பில் சொன்னதை நினைத்து சிரித்தோம்" - விஜய்யைத் தன் கணவருடன் சந்தித்த வரலட்சுமி

திரைபிரபலங்கள் தொடர்ந்து முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் முதல்வரைச் சந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்... மேலும் பார்க்க

``விவேக் சார் இருந்திருந்தால் நான் எப்பவோ இயக்குநர் ஆகியிருப்பேன்!" - உருகும் கிளி ராமச்சந்திரன்

நடிகர் விவேக் உடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்... மேலும் பார்க்க

"நானும் பகத் பாசிலும் எப்போதும் அதைப் பற்றி பேசுவோம்!" - 'இதயம் முரளி' கேமியோ பற்றி மாளவிகா மோகனன்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப்... மேலும் பார்க்க