செய்திகள் :

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

post image

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று ஆம் ஆத்மி தலைவர் ஆமன் அரோரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த விமானத்தில் இருக்கும்போது, ஏன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், விமானம் தரையிறங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கேட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை, மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவ விமானத்தை தலைநகர் தில்லியில் தரையிறக்கியிருக்கலாம். ஆனால், அதனை விடுத்து அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது எண்ணற்றக் கேள்விகளை எழுப்புகிறது என்று கூறியிருக்கிறார்.

இதுபோல, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், இந்த விமானம் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டதால், பஞ்சாப் மக்களே அதிகம் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பது போன்ற தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயல்வாதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம் தலைநகர் தில்லியில் தரையிறக்கப்பட்டால், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் தொடங்கின. நாடு முழுவதும... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ... மேலும் பார்க்க

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு ... மேலும் பார்க்க

இந்தியர்களை மீண்டும் நாடுகடத்தும் அமெரிக்கா!

அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் நாடுகடத்தல் நடவடிக்கையில் இரண்டாவது முறையாக இந்தியர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 104 பேரை பிப்ரவரி 5 ஆம் தேதியில் அமெரிக... மேலும் பார்க்க

கேரளம்: ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா்... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை குறைகூறுவது காங்கிரஸின் வாடிக்கை -பாஜக

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை குறை கூறுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையது ஷாநவாஸ் உசைன் பிடிஐ ... மேலும் பார்க்க