செய்திகள் :

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

post image

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெரிக்காவையும் பாதித்து இருக்கிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக டொனால்டு ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக புதிய டாலர் கரன்சியை வெளியிட இருக்கிறது. இந்த கரன்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. தற்போது டாலரில் கருவூல செயலாளர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோர் கையெழுத்து இடம் பெற்று இருக்கிறது.

இதில் கருவூல பொருளாளர் கையெழுத்தை நீக்கிவிட்டு அதில் ட்ரம்ப் தனது கையெழுத்தை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 1861ம் ஆண்டுதான் டாலர் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் பிறகு அதிபர் கையெழுத்து டாலரில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக 100 டாலர் கரன்சியில் ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் இந்த கையெழுத்து விரிவுபடுத்தப்படும். இது குறித்து கருவூல செயலாளர் பெசென்ட் கூறுகையில், ''இந்த நடவடிக்கை 250வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், நாங்கள் நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இருக்கிறோம்.

நமது பெரிய நாடு மற்றும் அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்பின் வரலாற்று சாதனைகளை அங்கீகரிக்க அவரது பெயரைக் கொண்ட அமெரிக்க டாலர் பில்களை விட சக்திவாய்ந்த வழி எதுவுமில்லை''என்று தெரிவித்தார். டொனால்டு ட்ரம்ப் கையெழுத்துடன் கூடிய டாலர்களை அச்சடிக்கும் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் அவை புழக்கத்திற்கு வரும். ஏற்கனவே அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், அரசாங்க திட்டங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாணயங்களில் அதிபரின் பெயரை வைக்க ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது..

"மாதவிடாய் விடுமுறை வேண்டாம்" - கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பெண்கள் மனு

பெண்களுக்குச் சில மாநில அரசுகள் மாதவிடாய் கால விடுமுறை வழங்கி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் கூட மாதத்தில் ஒருநாள் இதற்காக பெண்களுக்கு விடுமுறை கொடுக்கின்றன. ஆனால் இந்த மாதவிடாய் கால விடுமுறை தங்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா அமைச்சரின் படுக்கை அறை காணொளி - திட்டமிட்ட சதியா? பதவி விலகுவாரா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் நர்ஹரி ஜிர்வால். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் ச... மேலும் பார்க்க

வகுப்பறையில் மாணவியிடம் 'ஐ லவ் யூ' சொன்ன பேராசிரியருக்குச் செருப்படி; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பெங்களூருவில் உள்ள நிலமங்களா பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் அப்துல். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு மாணவியிடம் ஐ லவ் யூ என... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 7 நாய்கள்; ஓடும் லாரியிலிருந்து தப்பித்து 17 கிமீ தூரம் பயணம் - viral video

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் பகுதியில், நாய் இறைச்சி கடைக்காக கடத்திச் செல்லப்பட்ட ஏழு வளர்ப்பு நாய்கள், ஓடும் லாரியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து, சுமார் 17 கிலோமீட்டர் தூரம் ஒன்ற... மேலும் பார்க்க

`161 பேர், 363 மணிநேரத்தில் உருவாக்கியது' - பார்ட்னருக்கு நடிகர் ஆமிர் கானின் காதல் பரிசு!

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது கௌரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்.தனது 60-வது வயதில்தான் ... மேலும் பார்க்க

'மோசமான முறையில் நடந்துகொண்டார்' - இயக்குநர் பாலியல் தொல்லை அளித்ததாக மோனாலிசா போஸ்லே குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே வைரல் நட்சத்திரமானார். கேரளத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள அவர், தனது காதலனான மகாராஷ்டிராவைச் சேர... மேலும் பார்க்க