செய்திகள் :

“அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்த முதல்வர்” - பதவியேற்பு விழா எப்போது?

post image

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல்வருடன் அமைச்சர்களாக பதவியேற்ற ஒன்பது பேருக்குமான துறைகள் ஒதிக்கீடும் அப்போது அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், “தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவடைய போகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான துறைகளும் இதுவரை ஒதுக்கவில்லை. முக்கிய துறைகளுக்கு மட்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளனர். அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடும் இதுவரை நடக்காமல் இருப்பதால் ,துறைவாரியான அதிகாரிகள் மாற்றமும் இன்னும் முழு அளவில் நடந்தேறவில்லை.

ஆளுநர் அர்லேகர் - விஜய்
ஆளுநர் அர்லேகர் - விஜய்

கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வந்தார்கள். தேர்தல் விதிமுறைகளும் இப்போது இல்லாமல் இருப்பதால், அதிகாரிகள் துறையின் அமைச்சர்கள் உத்தரவு இல்லாமல் எந்த கோப்புகளையும் நகர்த்த முடியவில்லை. மற்றொருபுறம், திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. எல்லாவற்றிற்கும் முதல்வரின் அலுவலகத்தையே அதிகாரிகள் நாட வேண்டியுள்ளது. இந்த சிக்கலை தீர்க்க அமைச்சர்கள் நியமனத்தை விரைவாக நடத்தவேண்டுமென அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லிவந்தனர்.

ஏற்கெனவே அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து தனி அணியாக உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கும் திட்டம் இருந்தது. ஆனால், அவர்கள் மீது வழக்கு இருப்பதும், அ.தி.மு.க வில் உண்மையான அணி யார்? என்பதில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருவதாலும், அ.தி.மு.க-வை இப்போது அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என முதல்வர் அலுவலகம் முடிவெடுத்துள்ளது.

அதற்கு பதிலாக ஏற்கெனவே சொன்னது போல காங்கிரஸ் கட்சியின் இரண்டு பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்கான பட்டியலை முதல்வர் இறுதி செய்துவிட்டார். இதுகுறித்து ஆளுநரிடம் பேசுவதற்காகவே முதல்வரின் முதன்மை செயலாளர் செந்தில் குமார், ஆளுநர் அர்லேக்கரை இன்று காலை சந்தித்தார்.

தமிழக அமைச்சரவை நியமனத்தை எப்போது வைத்துக் கொள்வது என ஆலோசனை நடந்தது. நாளை கேரள முதல்வர் பதிவியேற்பு விழா நடக்க இருப்பதால், அதை முடித்துவிட்டு வைக்கலாம் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதனால் அமைச்சர்கள் குறித்த அறிவிப்பை எப்போது வெளியிடலாம், என முதல்வரிடம் பேசிவிட்டு வருவதாக செயலாளர் செந்தில் குமார் சொல்லியிருக்கிறார்”என்கிறார்கள்.

த.வெ.க வட்டாரத்தில் பேசிய போது,“ முதல்வருக்கு ராசியான எண் 10. அந்த எண்ணிற்கு தகுந்தது போலவே, அமைச்சவையும் இருக்கும். தற்போது பதவியேற்ற ஒன்பது பேரை தவிற, மேலும் பதினைந்து பேர் அமைச்சர்களாக பதிவியேற்பார்கள்.

கூடுதல் இடங்களை பிறகு நிரப்புவார்கள். மாவட்டத்திற்கு ஒருவர் அமைச்சர் என்கிற கணக்கில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சேலம் பார்த்திபன், புதுக்கோட்டை பர்வேஸ், தாஹிரா, மதுரையில் ஒருவர், துாத்துக்குடி ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. கோவையில் பெண் ஒருவருக்கு அமைச்சராகும் வாய்ப்புள்ளது. இன்று இரவு இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஆளுநர் முடிவை பொறுத்தே அறிவிப்பு வெளியாக உள்ளது ” என்கிறார்கள்.

நிதி அமைச்சர் செங்கோட்டையன்; பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் - யார் யாருக்கு எந்தெந்த துறை?

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றப்போது, 'இலாகா' இல்லாத அமைச்சர்களாக 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஐந்து நாள்கள் கழித்து, இப்போது யாருக்கு எந்தத் துறை என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

Nigeria: ``ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் முக்கிய தளபதியை வீழ்த்திவிட்டோம்" - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலில், ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க

'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. முதல்வர் ஆவதற்கு முன்பு பிரசாரத்தின் போது தனது முதல் மக்கள் சந்திப்பை விஜய... மேலும் பார்க்க

"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" - ஸ்ரீரங்கம் த.வெ.க எம்.எல்.ஏ

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், தரம் உயர்த்துவது குறி... மேலும் பார்க்க

Pawan Kalyan: "விஜய்யுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்" - தொண்டர்களுக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

தமிழ்நாட்டின் முதல்வராக, நடிகர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அவரை ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் ஒப்பிட்... மேலும் பார்க்க

`பாஜக-வின் சர்க்கஸ் யானைபோல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்'- திண்டுக்கல் ஐ.லியோனி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில் ... மேலும் பார்க்க