செய்திகள் :

அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் நபரின் செயலால் அதிர்ச்சி!

post image

அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒருவர் காஷ்மீர் பிரஜை போன்று உடையணிந்து வந்தார். அவர் கோயில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் கோயிலின் தென்பகுதியில் உள்ள சீதா கோயில் அருகில் அமர்ந்து திடீரென நமாஸ் செய்ய ஆரம்பித்தார். இதைபார்த்த பாதுகாப்பு படையினர் அவரை நமாஸ் செய்ய விடாமல் தடுத்தனர்.

உடனே அவர் உருது மொழியில் ஏதோ மந்திரங்களை சொன்னார். இதனால் அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் அகமத் ஷேக் என்றும், அவரது சொந்த ஊர் காஷ்மீரின் சோபியன் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது கோயில் நிர்வாகமோ எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் ஒருவர் கோயில் வளாகத்தில் நுழைந்து நமாஸ் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் வளாகத்தை சுற்றிலும் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை சாப்பிட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கோயிலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ஹோட்டல்களிலும் அசைவ உணவு மற்றும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட உதவி உணவு கமிஷனர் மணிக் சந்திர சிங் கூறுகையில், ``

ராமர் கோவில் பகுதியைச் சுற்றி அசைவ உணவு விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராமன் கோயில் பகுதியிலும் அருகிலுள்ள இடங்களிலும் அசைவ உணவை ஆன்லைனில் விநியோகம் செய்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த உத்தரவை மீறினால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறினார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க