செய்திகள் :

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு பலியாகும் தெருநாய்கள் - 1,100 தெருநாய்கள் கொன்று குவிப்பு!

post image

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும்பாலான மக்களின் வாதம். அடுத்த தேர்தல் நெருங்கும்போது ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிடுவது வழக்கம்.

தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கிராமத்தில் இருக்கும் தெருநாய் தொல்லைக்கு தீர்வு காண்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன் தெருநாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கொன்று குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பகடபல்லி என்ற கிராமத்தில் கடந்த 22-ம் தேதி 300 நாய்கள் விஷ ஊசி போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இதே போன்று காமரெட்டி மாவட்டத்தில் 200 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாச்சரம் என்ற கிராமத்தில் 100 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள சாயம்பேட் மற்றும் அரேப்பள்ளி கிராமங்களில் 300 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அவர்களின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள பதிபகா என்ற கிராமத்தில் 200 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விலங்குகள் நல ஆர்வலர் கெளதம் இக்கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,'' பஞ்சாயத்து செயலாளர் உத்தரவின் பேரில் தெருநாய்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளனர்''என்று தெரிவித்தார். அவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் தெலங்கானாவில் 1100 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள 60 கேங்க்ஸ்டர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை - கோல்டி பிரர் பெற்றோர் கைது

பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு - இந்தி நடிகர் நதீம் கான் கைது!

பாலிவுட் நடிகர் நதீம் கான் மீது அவரின் வீட்டு வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 40 வயதான அப்பெண் பல பாலிவுட் நடிகர்கள் வீடுகளில் வேலை செய்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மெகா... மேலும் பார்க்க

`ரெளடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய ரௌடி என்கவுண்டர்' - பெரம்பலூர் பரபரப்பு

கடந்த 24-ம் தேதி ரௌடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது... மேலும் பார்க்க

கேரளா: ஒரு வயது குழந்தை அடித்துக் கொலை; நாடகமாடிய தந்தை சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிஜில். மைக் செட் ஆப்பரேட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி ... மேலும் பார்க்க

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்... மேலும் பார்க்க

வேறொருவரை மணந்ததால் ஆத்திரம்; காதலனின் மனைவிக்கு HIV ரத்தம் செலுத்திய இளம்பெண்; அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திரா மாநிலம், கர்னூல் என்ற இடத்தை சேர்ந்தவர் வசுந்தரா(34). இவர் டாக்டர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த டாக்டர் வசுந்தராவை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் த... மேலும் பார்க்க