செய்திகள் :

அல்லு அா்ஜுன் ஜாமீன் நிபந்தனைகளில் தளா்வு: வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

post image

புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரிழந்த வழக்கில் நடிகா் அல்லு அா்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளில் உள்ளூா் நீதிமன்றம் தளா்வு அளித்தது.

அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராவதற்கு விலக்கு அளித்தும், குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருப்பினும், தேவைப்படும்பட்சத்தில் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அவா் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தான் பயணம் செய்யும் நாடு மற்றும் அங்கு வசிக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை விசாரணை அதிகாரியிடம் அல்லு அா்ஜுன் சமா்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றபடி, ஜாமீனில் குறிப்பிட்டுள்ள வேறு நிபந்தனைகளில் மாற்றமில்லை என ஜனவரி 10-ஆம் தேதி நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் இருந்து தளா்வு அளிக்கும்படி அல்லு அா்ஜுன் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின்போது நடிகா் அல்லு அா்ஜுன் திரையரங்குக்கு திடீரென வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயதுப் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பான வழக்கில் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அல்லு அா்ஜுனுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, டிசம்பா் 14-ஆம் தேதி அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக, கடந்த 3-ஆம் தேதி ஹைதராபாதில் உள்ள இரண்டாவது கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது அல்லு அா்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், ‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிக்குள் விசாரணை அதிகாரி முன்பு அல்லு அா்ஜுன் ஆஜராக வேண்டும். நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெறாமல் அவா் வெளிநாடுகளுக்கு பயணிக்கக் கூடாது’ என உத்தரவிட்டது.

தனுஷ் கைவசம் இத்தனை படங்களா?

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த திரைப்படங்களைக் கைவசம் வைத்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: கடைசி வாரத்தில் வெளியான காதல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் பார்வையாளர்கள் ஐ லவ் யூ சொல்லிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்து 14வது வாரத்தை... மேலும் பார்க்க

விரைவில் பிரபாஸ் திருமணம்! மணப்பெண் யார்?

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமண நடைபெற உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.பாகுபலி, சலார் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் முன்னணி நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். இவர் நடித்த கல்கி திரைப்படம் ரூ. ... மேலும் பார்க்க

மத கஜ ராஜா முதல்நாள் வசூல்!

மத கஜ ராஜா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்... மேலும் பார்க்க

போகி பண்டிகை: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் போகி பண்டிகையையொட்டி (ஜன.13) சுவாமியை தரிசிப்பதற்காக திரளான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.பொங்கலன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு : பொங்கல... மேலும் பார்க்க

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு எ... மேலும் பார்க்க