செய்திகள் :

'அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை...' - விஜய் காரை மறித்த பெண் தற்கொலை முயற்சி!

post image

பனையூரின் தவெக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா அக்னல் தற்கொலை முயற்சி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜிதா
அஜிதா

தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் செயலாளராக சாமுவேல் என்பவரை கடந்த 23 ஆம் தேதி விஜய் நியமித்திருந்தார். சாமுவேல் கட்சிக்காக வேலையே பார்க்காதவர் என்றும், முறையாக கட்சிப் பணியாற்றிய தனக்குதான் மா.செ பதவி வேண்டுமென்றும் அஜிதா முறையிட்டார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூடிய அஜிதா, விஜய்யின் காரை மறித்து போராட்டம் செய்தார்

விஜய்யை பார்க்காமல் நகரமாட்டேன் என கட்சி அலுவலகத்துக்கு வெளியே தர்ணாவிலும் ஈடுபட்டார். கட்சி மேலிடத்திலிருந்து, 'பிரச்னை பண்ணாதீங்க. பேசி தீர்த்துக்கலாம்' என அஜிதாவுக்கு தகவல் சொல்லப்பட பனையூரிலிருந்து கலைந்து சென்றார். இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்த அஜிதா இன்று தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜிதா
அஜிதா

அஜிதாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். 'உழைச்சதுக்காக பதவி கேட்டவங்களுக்கு திமுக கைக்கூலினு சமூகவலைதளங்கள்ல பட்டம் கட்டுனாங்க. அதுலதான் அக்கா மனசு உடைஞ்சுட்டாங்க. அதிகளவுல தூக்கு மாத்திரை போட்டு மயங்கிட்டாங்க. பக்கத்துல இருக்க ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்' என விஷயத்தை உறுதிப்படுத்தினர்.

" தமிழ்நாட்டின் 2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது!"- காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. விசில் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள த... மேலும் பார்க்க

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க