'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்
Tamil Cinema: திரைப்பட நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்கக்கூடாதா!- தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் என அனைவரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில், சில முக்கியமான தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கவோ இயக்கவோ கூடாது என்கிற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அந்த ஆலோசனைக் கூட்டம் குறித்தும், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக சிக்கலாக பேசப்படும் விஷயத்திற்கும் எப்படி தீர்வு காணப்பட்டது என்பது குறித்தும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தனஞ்செயனிடம் பேசினோம்.
அவர், "அந்தக் கூட்டத்தில் அனைத்து நடிகர்கள் என சொல்லப்படவில்லை. அனைத்து நடிகர்களையும் சொல்லியிருக்கிறோம் என தவறாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கைதான் வைத்திருக்கிறோம். இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அ
வர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் ஓடிடி படங்கள், சீரிஸ்கள் என கவனம் செலுத்தினால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது.
அதுபோல, முன்னணி இயக்குநர்களும் ஓடிடியை தவிர்த்து தியேட்டருக்கான திரைப்படங்களை இயக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம்." என்றவரிடம், "ஓடிடி-க்கு படம் தயாரித்தாலும் அது தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைதானே கொடுக்கும்." எனக் கேள்வி எழுப்பினோம்.

இதற்கு பதிலளித்தவர், "தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, ஓடிடி ப்ராஜெக்ட்கள் மூலம் பெரியளவில் பலன் கிடையாது. ஓடிடி நிறுவனங்கள், அவர்களின் சொந்த தயாரிப்பாக, ஒரிஜினல் படைப்புகளைக் கொண்டு வருகிறார்கள்.
இதனால் தனிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் வாய்ப்பும் லாபமும் கிடைப்பதில்லை. எனவே, சினிமா துறையில் நலன் கருதி நடிகர்கள் தியேட்டருக்கான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஒருமித்த முடிவை எடுத்திருக்கிறோம். அனைத்து நடிகர்களுக்கும் இதை சொல்லவில்லை என்பது இங்கு தெளிவுபடுத்த வேண்டிய விஷயம்." என்றார்.
"நீண்ட காலமாக திரையரங்குகளில் வெளியான படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி-யில் வரவேண்டும் என்கிற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறதே, அதற்கு இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?" எனக் கேட்டோம். அதற்கு, "அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறோம்.

ஓடிடி நிறுவனங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்தே வாங்குவதால், அனைத்து மாநிலத் திரையுலகினரும் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். மற்ற மொழி திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee) அமைத்து இறுதி முடிவு எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்." என்றார்.

















