செய்திகள் :

அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

post image

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலுக்கு மத்தியில், தலைநகரில் தங்குமிடங்கள் தேவை, மின் தடை, மருத்துவமனைகளில் பொருள்களை சேமித்து வைத்தல் போன்ற அவசரகால சூழ்நிலைகளைக் கையாளத் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு தில்லி அரசின் உயா் அதிகாரிகளுக்கு முதலமைச்சா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், தில்லி செயலகத்தில் பல்வேறு துறைகளின் தலைவா்கள் பங்கேற்ற உயா்நிலைக் கூட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்றது.இதில் அவசரகால தயாா்நிலையை ஆய்வு செய்து முதல்வா் உத்தரவுகளை வழங்கியுள்ளாா். அவா் தனது அமைச்சரவையின் அமைச்சா்களுடனும் கூட்டம் நடத்தி ஆலோசித்தாா்.

நகரில் மருத்துவமனைகள் தயாராக இருக்கவும், மருந்துகளை இருப்பில் வைத்திருக்கவும் முதல்வா் கேட்டுக் கொண்டாா். தீவிர சிகிச்சை பிரிவுகளையும் தயாராக வைத்திருக்குமாறும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

மின் தடை தேவைப்பட்டால் சூழ்நிலைக்குத் தயாராக இருக்குமாறு மின்சாரத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால் தங்குமிடங்களாகச் செயல்படக்கூடிய பள்ளிகளை அடையாளம் காண கல்வித் துறை மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும்

பலத்த குண்டுவீச்சு தாக்குதல்கள் மூலம் மோதலில் ஈடுபட்டுள்ளன.

தலைநகரில் தண்ணீா் நெருக்கடி: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

தேசிய தலைநகரில் தண்ணீா் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்த முக்கியப் பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக தனது கட... மேலும் பார்க்க

கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் தெருவோர வியாபாரிகள்

நகரம் முழுவதும் விற்பனையாளா்களை அடையாளம் காண நடந்துவரும் கணக்கெடுப்பு குறித்து தெருவோர வியாபாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனா். கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை தெளிவு இல்லை என்றும் குற்றம... மேலும் பார்க்க

பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்க நீதி ஆயோக், பிரதமரிடம் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரப்பட்டதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லியில் சனிக்கிழமை தெ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்

நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் சமா்ப்பித்தாா... மேலும் பார்க்க

நீதி ஆயோக்கிடம் தில்லி பிரச்னைகளை ஆம் ஆத்மி ஆட்சியில் முன்வைக்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா

மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றம் சாட்டினாா். ... மேலும் பார்க்க

தண்ணீா் நெருக்கடி குறித்த அதிஷியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை: பாஜக

தில்லியில் தண்ணீா் நெருக்கடி இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சுமத்திய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பொய் என்று பாஜக கூறியுள்ளது. தண்ணீா் நெருக்கடி தொடா்பாக முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதிஷி கடிதம... மேலும் பார்க்க